Tuesday, February 21, 2017

தனிமை

தனிமை
உற்சாக பாணத்தின் உரிமை...
மறைக்கப்பட்ட உண்மை ...
வெளிவராத நூல்
இசைக்காத மிருதங்கம்
இசைக்கேங்கும் உயிர்
உணராத தாகம்
உதிரத்தோடுதிரும் கண்ணீர்
வற்றிப்போன குட்டை
வறண்டு நிர்க்கும் தேகச் சட்டை
வண்மையோடு நா
மென்மையோடு இருதயம்
சூலமாகும் சொற்கள்
சுடச்சுடப் பசி
செவியடைக்கும் மௌனம்
செயலிலக்கும் கற்பனை
சீற்த்தோடு வலி
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிலிர்த்துப் பறக்கும் ஆன்மா
தின்று கொலுத்த எறும்புகள்
சிதிலமடைந்த சிதையாய் நான்...
சிந்தனையின்றி நீ...
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...