Saturday, October 15, 2011

ஈழம்..


எம்மினமழிய எவ்வழியுமிலை தோழா...
எந்திரத்தை தூக்கி,
மந்திரமோதி..
எந்நெஞ்சை கிழித்தாலும்
எந்தமிழன்னயை யானெப்படி
மறபேன்....
எவ்வெண்ணங் கொண்டு
என்மனந்திரியினும்...
அவ்வெண்ணமதிலும்
அன்னையல்லவோ அரசால்கிறாள்...
விழியறுக்க வேதனையென்ன....
என் வலியெல்லாம்
வதைபட்ட ஈழமதில்
வந்திரங்கியதல்லோ...
குரிதியுண்ண கூடிவந்தோர்
விடியல்வர வீனாவார்...
வருமோர் காலம்...
தினமொரு எதிர்காலம்..
விடிவதுறுதி...
நீ அழுவதென்ன....
தமிழா...எந்தமையனே...
நீ விழுந்துதான் கிடக்கிறாய்...
வீழ்ந்துவிடவில்லை...
விழித்துவா வேந்தனே...
விடியலுறுதி.....
~*~

சும்மா....உ..லூ...லு...லா.

நிலையான நிலவு
உன்னை
நிம்மதியில்லாத போது
காணவில்லை....

நித்தம் நித்தம்...
கனவில் காண...
நித்திரையும் வரவில்லை....

நினைவில்மட்டும்
உன்னைத்தேட
நிழல் கூட
துணையில்லை....

கண்கழ் வழியே
கண்ணீர் வழிய
துடைப்பதற்கு
கைகள் இல்லை....

வருத்தங்களை
வதைப்பதற்கு
ஆறுதல் சொல்ல
யாருமில்லை....

துன்பந்தனை சொல்லிடவே
தோழியொருத்தி
எனக்கில்லை....

அறுசுவை உணவிருந்தும்
காட்டுத்தீயாய்
பசியிருந்தும்
புசிப்பதற்கு மனமில்லை....

ஏன் எனைப் படைத்தாயோ...?
என இறைவனைக் கேட்டேன்....

அவன் சொன்னான்.....
சும்மா....உ..லூ...லு...லா.
....~*~

சக்காளத்தி


இயற்கையின்
இளைய மகள்....
இவ்வளவு நேரம்
மழைத்துளியில்
தலைமுழுகி....
சாரலாய் தலைதுவட்டி...
நட்சத்திர பொடுகு நீங்க....
மேக கூந்தல் ஒதுக்கி...
தமிழ் மகளாய் மஞ்சள் பூசி...
தன் விரிந்த கேசத்தில்
முகம் மறைத்து....
மெது மெதுவாய் விழி காட்டி...
நாணந்தெளிக்கிறாள்...

என் இதயம் நனைப்பதே
இவளுக்கு
முழுநேர வேலையாம்....

பாவம்.....
இங்கு ஏற்கனவே இவளின்
தமக்கையொருத்தி
கறைத்துவிட்ட சேதி
அறியால் போலும்.....

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...