Friday, April 8, 2011

உனக்காக.........

உன்
திறவாத மனதில்
திரண்டிருக்கும்
திரவியச் சோலையை
நான் திரைகடல்
ஓடிநாலும்
திரட்ட முடியாதே...

தீப்பிழம் பாய்
நீஇருக்க
திருடவும் முடியாதே...

பிரிதொருநாள்
நீ நனைவாய்...
நான் பிரிந்திருக்கும்
தருணங்களில்....

அன்று
உனது வேர்கள்
வழுவிழக்கும்
பூக்கள் மட்டும்
கவிப்பூக்களாய்
உன்மனதை
கணம் தாளாமல்
உடைத் தெறியும்...

அன்றுவரை
நான் பிரிந்தே
இருக்கிறேன்...
~*~

யாசிக்கமாட்டேன்....

பேருந்து நிலைய
பிச்சைக்கார சிறுவர்களுக்கு
பிச்சை போட்டேன்...

நானும் பிச்சைக் காரனானேன்....

அவர்கள் கேட்பது
வாழ்க்கைப் பிச்சை...

நான் கேட்பது
பிச்சைஎடா வாழ்க்கை...

தலையெழுத்து...

எவருக்கும் புரியாத
மொழி நீ....
உனக்கே புரியாத
எழுத்துக்கள் நான்...

Sunday, April 3, 2011

காவியம்...

ஊசி முனையில் நான்
உனக்காய் ஓர் இலக்கியம் வடித்தேன்....

நீ சென்றுவந்ததற்கு
அடையாளமாய்
துளைகள்...
என்னிடமும்
அடைக்கமுடியாததாய்
உண்டென்பது
அதன் உட்கருத்து....

?ய்...

பொய்,மெய்
இவைகளிரண்டையும்
நீ சொல்லும் போது
நான்
நாய்
போலிருந்தேன்

வித்தியாசம்
நாய்கு வால்
எனக்கு தலை..

சுத்தம் சுகம் தரும்...

சுகமான காற்று
சுவாசத்திற்கு இல்லை....

உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
நீ தென்றல் என
எவனோ புகழ்ந்ததால்....

நீ சுத்தமாய் இல்லை...

நீயிருந்தும் தனியாத தாகம்....

சில பொழுது அதிகமாய்
தாகம் எடுத்து
என் நுறையீரலின்
நுறைகரைத்தேனும்
தாகம் தீர்க
தவிக்கிறது என்
இதயம்..

கானல் நீராய்
உனை நினைத்து
கண்டுகொள்ளாமல்
இருந்தேன்...

நீ ஓர் மழைப் பொழுதில்
வறண்டு
போனதும்தான் தெறிந்தது...
நீ
கறைந்து
கொண்டிருந்த
பனி சிலையென்று...

குழந்தைக்கு என்ன தெறியும்...

குழந்தையிடம்
இருந்து
கத்தியைப்
பறித்தேன்....
அபாயம் கருதி...

கத்தி
கத்தி
உயிர்
அறுத்தது....
குழந்தை...

சத்தியமாய்...

நான் சத்தியம்
செய்கிறேன்...
நான் செய்யும்
சத்தியங்கள்
அனைத்தும்
பொய்யானவைகள்
என...

எதற்காக வென்றே தெறியவில்லை...

நான் கிழித்துத்
தைக்கப் பட்டவன்....

எனது தழும்புகளில்
நரம்புகள் இன்னும்
அறுக்கப் படவில்லை....

தெரித்திருந்த
இரத்தம் கூட
வளைந்து நெளிந்து
வடு வடுவாய்
என்னை அறுத்து
இதயம் எடுத்தவளின்
முகவரிதனை
வரைந்து காட்டியது...

அதைத் தொடர்ந்தே
அலைந்து பார்த்தேன்...
அகோரக் காயத்துடனே...

அங்கே அவள்
சின்னஞ் சிறு
மழலையருடன்
ஏதும் அறியாதவளாய்..
ஒரு மழலைப் போலவே....

அறுகே சென்றேன்
அன்னார்ந்தாள்...
அறுப்பட்ட காயம்
அவள் கண்ணில் பட
ஆக்ரோச நாகமாய்
மாறி
தைக்கப் பட்ட இடத்தில்
வைக்கப் பட்ட நாம்பினை
சரேலென் இழுத்தாள்...

கண்டது குற்றமா..
வினா கூட தொடுக்கவில்லையே
இந்த வேள்விதனை
வீசியதெதற்க்கென்றென்...

நரம்பாய் இருந்தது
நங்கையவளின் தலை முடியாம்....

துருவங்கள் இணைவதில்லை....

விசை கொண்டு
வின்னென ஈர்த்தவளின்
விழிபட்டு
வீசியெறியப் பட்டேன்....

இரு வேறு துருவங்கள் நாங்கள்...

இணைந்தால் புவிதாங்குமா...

அவ்வெண்ணங் கொண்டே

அங்கே
அப்படியே
நாங்கள்....

விழிக்காதே பெண்ணே...

வீசிஎரியப் பட்ட
வேல் கம்பு....
வின்னோக்கிப்
பாய்ந்த தடம்
என் விழிகளுக்கு
வானவில்...

வேல் கம்பாய்
எனை மாற்றி
வீசியெறிந்தாய்.....

வின்னோக்கி
சென்ற நான்
திரும்பவே இல்லை

விரும்பாமல்
விட்டு விட்டு
உன் விழி தேடும்
விந்தையென்ன...?

விழிக்காதே
பெண்ணே
நான் உன்
விரலோடுதான்
வீற்றிருக்கிறேன்...
~*~

நீ....நான்...அவள்...


நீ வளர்வதும்
தேய்வதுமாய்
இருக்கிறாய்...

நான் வளர்ப்பதும்
தேய்வதுமாய்
இருக்கிறேன்...

அவள் சிதைப்பதும்
வதைப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஒளிர்வதும்
ஒளிவதுமாய்
இருக்கிறாய்...

நான் ஒளிப்பதும்
ஒழிவதுமாய்
இருக்கிறேன்...

அவள் ஒளிவதும்
ஒழிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ ஓர் பொழுது
உட்கொள்வதும்
ஓர் பொழுது
உமிழ்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
ஒவ்வொரு
பொழுதிலும்
உட்கொள்ளவும்
முடியாமல்
உமிழவும்
முடியாமல்
தவிக்கிறேன்...

அவள்
கைகளை கொண்டு
நெறிப்பதும்...
விரகளை கொண்டு
இருக்குவதுமாய்
இருக்கிறாள்...

நீ இரவில்
வருவதும்
பகலில்
செல்வதுமாய்
இருக்கிறாய்...

நான்
உனது ஜனனத்திலும்
மரணத்திலும்
விழித்தே
இருக்கிறேன்....

அவள்
என் விழிகளை
அறுப்பதும்
இமைகளை
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ குளிர்வதும்
மிளிர்வதுமாய்
இருக்கிறாய்....

நான் வியர்பதும்
துடிப்பதுமாய்
இருக்கிறேன்...

அவள் தகிப்பதும்
எரிப்பதுமாய்
இருக்கிறாள்...

நீ என்னில் இருந்து
வேறுபட்டும்
மாறுபட்டும்
இருக்கிறாய்...

நான்
வேர்துளைத்த
வேந்தனாய்
மாரருந்து
இருக்கிறேன்...

அவள்
என்னில்
இருந்து
வேரு விட்டு
மார்துளைத்து
மரமாகிப்போனாள்...

ஆம்
நீ
நிலவாகிப் போனாய்...
நான்
நிழலாகிப் போனேன்...
அவள்
நிஜமாகிப் போனாள்...

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...