Saturday, February 16, 2013

மடியும் வரை மன்னிகாதே..

எனை என்ன வேண்டுமானாலும் செய்...
உன் இதழ் திறந்து திமிறி வா......
திணற திணற தீ மூட்டு...
திரும்பி பார்த்து திகைக்க வை...
திகைத்து விரிந்தால்...
விழிகளுக்குள் வாள்வீசு....
 சுருக்கி கசக்கும் பொது
சுடு நீரை சூலமக்கு...
வலியெடுத்து வாய் திறந்தாள்....
என் நாக்கிழுது  நறுக்கிப் போடு..
நறுக்கிய இடதில் செந்நீர் தெளிக்கும்
பொறுமையாய் புள்ளிவைத்து...
புதுப் புதிதாய் சுண்ணாம்புக் கோலமிடு....
விடியும் வரை விரல் கொண்டு
விதவிதமாய் கோடுகிழி....
விடிந்த பின்பு வீதியில் விட்டெறி...
மடியும் வரை மன்னிகாதே..
உயிரே....
மன்றாடுகிறேன்...
ஒரு முறையேனும்  மடி  கொடு...
நான் மரணிதபின்பாவது..
~*~

Monday, February 11, 2013

உனக்காக மட்டும்....

 என்னவளே....!

என்றேனும்
ஓர் நாள்...

ஓர் நிமிடம்...

ஓர் நொடிபொழுதேனும்
உன் கண்கள் என்னைத் தேடுமானால்...

அப்பொழுது...

உன் காவியக் கண்களை மூடி...

உன் மலரினும் மெல்லிய
மனதினைத்திறந்து...

மிருதுவாக துடிக்கும்
உன் இதயத்தில்
கைவைத்து...

சற்றே தலை
சாய்ந்து இளைப்பாறு....

அப்பொழுது....
உன் உள்ளங்கையில் ஊடுருவும்
அதிர்வுகள் வெளிப்படுத்தும்...
நீ உணர்ந்திடாத
ஆயிரம் அர்த்தங்களை....

உன் செவ்விதழ்களிரண்டும்
இணைந்து கொண்டு
இடவலமாய்...
பின்னி....
பினைந்து...
பிதற்றிச் சொல்லும்..
நீ வேண்டும் விநாடிகளை...

அதன் பின்...
அழகாய்
இமை சாய்த்து
அப்பொழுதே
அருவி கொட்டும்
உன் கன்னவேளிகளில்,
என் அன்பில்
நீ பெற்றுக்கொண்டு
சுவைதிடாத
அமிர்தமாய் ...

உன் வலம்புரியில்
வெளிப்படும்
விசும்பல் சத்தம்
வானதிர நீ
வீசிஎரியத்துடிக்கும்
வார்த்தைகளற்ற
உணர்வுகளின்
விஸ்வரூப வெளிப்பாடு..
சற்றே விம்மி உன்னை அழ வைக்கும்...

வருந்தாதே.....

ஒன்றை மட்டும் நினைவில் கொள்...

உயிர் பெரும்
ஒவ்வொரு வினாடியும்....
நான்
உயிர்
பிழைதே இருக்கிறேன்..

உனக்காக மட்டும்....

~*~






களவாடிப் போ...





எனைக் களவாடிப் போ...
நான் களவு போகத்தயார்...

~*~

Tuesday, February 5, 2013

கர்வம்...

எனை
எவரும்
விரும்புவதில்லை....

எனக்கு
கர்வமாய்
இருக்கிறது....

என்னைப்
போல்
எவருமே
இல்லை............


~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...