Monday, August 30, 2010

யான்...

நான் உன் நிழலாய் இருப்பதை
அறியாமல் நீ
இருளுக்குள் சென்றாய்...
பின் அறிந்து அழுதாய்...
உன் கண்களின் ஈரக்கசிவு கலப்படமற்றதாய் வழிந்துருக வழிந்துருக....
வதைபட்டேனடி நான்...
வலிகொண்டு கதறும் என் சப்தம் உன் செவிசேர நியாயம் இல்லைதான்...
நீ என்னை தொலைத்ததாக
நினைத்து அழுகிறாயா..?
இல்லை நான் தொலைந்ததாக நினைத்து அழுகிறாயா..?
அர்த்தமற்றதாய் உன் அழுகை அர்த்தம் சொல்ல துடிப்பதை உணர்கிறேன்...
நீ என்னை தொலைக்கவும் இல்லை...
நான் தொலையவும் இல்லை...
நீ வெளிச்சத்தில் மிளிரும் நிலவாய் இருந்த போது நான் நிழலாய் இல்லை...
ஆனால் இருந்தேன்..
அன்று உனக்கு நிழலில்லை...
அங்கு நீ நிழல் தேடவில்லை...
இன்று நீ உன் இமைகளை இருக்க மூடி அழுகிறாய் நிழல் தேடி..
நீ எனை நிழலெனக் கண்டதெங்கே.?
புரியாதப் புதிருக்கு விடைசொல்லி நீ புன்னகைத்தாய்..
நீ புரிந்துகொண்ட வினாவிற்கு
விடைசொல்லத் தயங்குவதேன்..
சரி,போதும்..
சற்றே திற உன் கண்களை..
கரைபடிந்த கண்ணங்களை
கரங்கள் அரவணிக்க
தெளிந்த நீரோடையில்
உன் பார்வையில் நெளியும் யான்...
உன் நிம்மதியாயும் யான்...
உன் நெருடலாயும் யான்...
உன் நிழலாயும் யான்..
உன் நித்திரையாயும் யான்..
நீயாயும் யான்..

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...