Wednesday, October 6, 2010

அனுபவம்+அறிவு=தெளிவு....

என் சில நேரப் பசி...
சில நாட்கள் நீண்ட கோபம்...

யார் மீது..!?

யார் மீதோ....!

அடிவியிறில் சுரக்கும் அமிலம்...
கந்தகத்தின் வீரியம் கூட்டி குடல்திண்ண...
என்றைக்கோ நான் அழுத சப்தம்...
இன்றைய நினைவில்...
அழக்கூடாதெனப் பிடிவாதமாய்
அரங்கேறிய கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ....!

விரல்களின் இடைவெளி எடுத்த திண்பண்டம்...
என் நாவுக்கு அஞ்சி ஒழிய முனைந்ததே...
அதற்கு ஒழிந்துகொள்ள
கட்டிடங்கள் எழுந்தைக் கண்டு
கண்சிவத்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ...!

பெய்த மழையெல்லாம்
பெறத் துடித்த போது வரவில்லையே...
இளைப்பாரிய இடத்தினிருந்தும்...
என்னை எழச் செய்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ....!

வேண்டாத போதும் விரும்பி வந்த என் சொந்தம்...
விரும்பும் போது
விழகிப் போனதால்...

வீரிட்டு வந்த கோபம்..

யார் மீது...!?

யார் மீதோ...!

சில்லறையாய் சிரித்த என்னிடம்
சில்லறைக்காக சிரித்தவர்களின் ரூபம்
சீண்டிப்பார்த்து சிரிப்பதனால்...
சீற்றத்துடன் வந்த கோபம்...

யார் மீது...!?

யார் மீதோ...!

நான் அனுபவிக்க நினைத்த தனிமையின் சுகம்...
அவதிப்படும் போது அறிந்துகொள்ளத் துண்டியதே...
அதன் தாமதம் கண்டு
தாவி வந்த கோபம்...

கோபம்...?

ஏன் கோபம்....?

நான் அனுபவிக்க நினைத்தேன்..
அனுபவம் கிடைத்தது....

அனுபவம் அறிந்து சொன்னது...

கோபப்படாதே...

கப்பம்...

பிளைக்க வழித் தேடி
படி யேறினோம்...
படியேறியதற்கும்
கப்பம் கேட்டான்...
அப்பம் சுட்டக் காசாயினும்
கசந்துதான் கொடுத்தொம்...
நரம்பில்லாத அவன் நாக்கில்
ருசி எப்படித்தெறியும்...

Saturday, October 2, 2010

உன் நிறந்த மௌனத்தில்...

பேசுவதற்கு ஒன்றும் இல்லை....


மிஜச்இலராசு

எழுத்துக்கள் கூட சேர மறுக்கிறது...

என் செய்ய என என்னும்போது...
எதேச்சையாக நீ சொன்னாய்...
என்னைப் பார் என்று...
இப்போது பேசுவதற்கென்ன?

மழை மழையாய் கவிதையே கொட்டுகிறதுபார்...

உன் நிறந்த மௌனத்தில்...

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...