Thursday, September 30, 2010

தினம் தினம் கொண்டாட்டம்...

நீ இன்று பிறந்ததற்காக
இன்றய நாளைக் கொண்டாடுகிறாய்....

நானோ....

நீ பிறந்த நாளை
அறிந்த நாள் முதல்,
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுகிறேன்....

Sunday, September 5, 2010

நீதான் என் சுகம்...

உன்னை நினைப்பதைவிட
உன் நித்திரையில் கனவாவதே
சுகம் ...

உன்னை பார்ப்பதைவிட
நீ கண்டு ரசிக்கும் ஓவியமாவதே
சுகம் ...

உன்னுடன் பேசுவதைவிட
நீ பேசும் மொழியாவதே
சுகம் ...

உன் சோகத்தில் நான்
தவிப்பதைவிட
தவிக்கும் உன்னைத் தைரியப்
படுத்துவதே
சுகம் ...

உன் துக்கத்தில் நான்
துயிலுருவதைவிட
தவிக்கும் உனக்குத்
துணை நிற்பதே
சுகம் ...

உன் தோல்விக்கு வருந்துவதைவிட
உன் வெற்றிக்கு வழி வகுப்பதே
சுகம் ...

உன் அழுகையின் கண்ணீராவிட
உன்னைச் சிரிக்கச்செய்து
உன் சிரிப்பின் ஒலியாவதே
சுகம் ...

உன்னுடன் நடப்பதைவிட
நீ நடக்கும் பாதையில்
பலியாகும் எறும்பாவதே
சுகம் ...

உன் கால்களில் கொலுசாய்
இருப்பதைவிட
உனது காலடி ஓசையாய் இருப்பதே
சுகம் ...

உன் கைகளில் வளையலாவதைவிட
உன் உள்ளங்கை ரேகையாவதே
சுகம் ...

உன்னுடன் உண்ணுவதைவிட
நீ உண்ணும் உணவில்
ஊட்டச்சத்தாவதே
சுகம் ...

உன் கூந்தலில் மலராவதைவிட
உன் கூந்தலின் வாசமாவதே
சுகம் ...

உன் காதுகளில் தோடாவதைவிட
உன் செவி சேறும்
இசையாவதே
சுகம் ...

உன் முகத்தில் மஞ்சலாக
இருப்பதைவிட
உன் நெஞ்சத்தின் நேசமாக
இருப்பதே
சுகம் ...

உன்னை அணைக்கும் போர்வையாவதைவிட
நீ அணைக்கும் பொம்மையாவதே
சுகம் ...

உன் இதழ்களை சுவைப்பதைவிட
உன் இதழ் வெடிப்பின் ஈரமாவதே
சுகம் ...

உன்னுடன் வாழ்வதைவிட
உனது வாழ்க்கையாவதே
சுகம் ...
நான் உனது உடலோடு கலந்து
உறவாடுவதைவிட
உனது உயிரோடு உறவாடும்
உணர்வாவதே
சுகம் ...

சுகம்......

சுகம்...........

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...