Wednesday, February 9, 2011

யுகம் யுகமாய் யுத்தம்செய்...

அலைச்சலில் தொலைந்த
சில நொடிப்பொழுதுகள்
உயிர்பெற்றழத் துடித்த
அந்த பொழுது...

பேருந்தின் பேரிரைச்சல்
செவிகளுக்குள்
சேராமல்போன சில நொடிகள்...

வேரறுந்தும் விழாத
தலை மயிர்கள்
உயிர்பெற்று பறந்த
ஆச்சர்யம்...

சாறுபிளியும்
நெறிசலிலும்
உணர்விற்கு
உணவாகிய
சில நொடி நிகழ்வு...

உழைத்துக் களைத்துப்போன
மக்களின்
வியர்வைநாற்றமும்
மண்வாசமாய் மாறிய
அந்தத் தருணம்...


தொப்பைவாதிகளால்
ஏறிமிதிக்கப்பட்டும்
காற்றில் மிதந்த அந்த
நிலைகொண்ட
அனுபவம்...

எட்டாத கம்பியில்
இல்லாத இடைவெளியை
எக்கிப்பிடிக்க துணிந்த
பொழுதுகளிலும்
புல்வெளியின்
பனித்தூரலை
அனுபவித்த நிஜமான
ஒரு நிகழ்வு..


எங்கும் கூட்ட நெறிசல்
அதிலும் உனக்காக
ஒதுக்கப்பட்டதாய்
ஓரிடைவெளி...

அதிலமர்ந்த நீ அழகாய் சிந்திய சில அமைதிப் பார்வை....

அடைமழையாய் அடிவயிறு வரை மின்னல் பாய்ச்சி அணுக்களை பிளந்து பின் இணைத்து ஓர் அற்புத போர் புரிய...

அடடா இவள் விழிசெய்த வாட்போரிலும் வீழ்ந்து போய் மீண்டும் எழுகிறேன்...

இமைகளால் மற்போரிட்டு மறுபடியும் சாய்க்கிறாள்...

பின் புன்னகை தூவி
எனை மீண்டும்
அழைக்கிறாள்
புதுவித போர் புரிய...

புரியாமல் தவிக்கிறேன் தோழ்விகள் எனைத் துளையிட்டுச் செல்லாத தருணங்களை...

ஓர்நாள்
புத்தகங்கள்
நிரம்பி வழியும்
இந்தப் போர்களை
பற்றிய குறிப்புகளை
சேகரித்தே...

Tuesday, February 8, 2011

ஓ மனமே....

மனதை தேடி
அழைந்தேன்
மகிழ்ச்சி குடியிருந்த
பொழுது ....
மரணத்தை தேடி அழைந்தேன்
மகிழ்ச்சியை நீ
குடித்திருந்த பொழுது ..
மனமும் கிடைக்க வில்லை..
மரணமும் கிடைக்க வில்லை..
மனம்
மரணித்திருந்தது..

நானுமோர் நரன்...

காற்றுக்கும் உனக்கும்
கவிபாடும் ஒற்றுமை ...
காக்கைக்கும் எனக்கும்
ஒற்றுமையில் வேற்றுமை ...

தொலைந்தவனானேன்...

சிறகுகளில்லா
பறவை நான்
பறக்கிறது மனம்
பறவைகள் அறியா
பாலையிலும் ,
சோலையிலும்,
மனிதனைத் தேடி....

ஆனாலும் ஆனாலும் ஆருயிரே...

சொட்டு சொட்டாய்
வழியும் என் நினைவுகள்
என் மார்பில்
விழுந்து தெறித்து
சிதறிவிடுகிறது
ஆனால் அதில் கலந்து வரும்
உன்மீதான பாசம் மட்டும்
படர்ந்து விடுகிறது ...
அதில் தினந்தோறும்
வழுக்கி விழுவது
நீயாக இருந்தாலும்
தாங்கிப் பிடிப்பது
நானாகவே இருக்கிறேன்...
நீ விழுவதாக இருந்தாலும்...
தழுவுவதாக இருந்தாலும்...
நானாகவே இருக்க
துடிக்கிறேன் ...
நீயோ சிலநேரம் மலர்களில் விழுகிறாய்,
சில நேரம் மழலைகளை
தழுவுகிறாய் ...
மலரைவிட மென்மையாதல்ல
என்நெஞ்சம் ...
மழலையைப் போல்
சுத்தமானதல்ல என் மனம்...
ஆனாலும் ஆனாலும்
ஆருயிரே ...
நீ அணைக்காமல்
ஆராது என்னுயிரே....

அசைந்தேன் அசரவில்லை...

கனவிலேறி காதல் செய்கிறேன்
காதலியும் இல்லை ...
கர்வமும் இல்லை...
காற்றில் ஆடி
கவிழ்ந்து போகிறேன்
நாணலும் இல்லை ...
நான் நாணலும் இல்லை...

உளி நீங்கள்தான்...

செதுக்கும் வரை சிதைவது நான்..
செதுக்கிய பின்
செவ்விதழ் குழியும்
சிற்பம்
நீ

தேடல் தெருவிலில்லை...

நான் என்றோ தேடிய
சிலை இப்பொழுதுதான்
செதுக்கப் படுகிறது
விலாசம் தெறியாமல்
அலைவது வீண்தானே
நானே விலாசமானேன்

பொய் சொல்லத் தெறியவில்லை உனக்கு...

உனது கண்டிப்பான பார்வையில்
நான் சுதந்திரமாய்
திரிந்து செல்ல
என்று அனுமதி கிடைக்குமென்று
ஏங்கி ஏங்கி அலைகிறேன்
ஆனால் உனது விழிகளோ
இமையின் இறகுகள் திறந்தும்
எனை ஏரிட மறுக்கிறது ...
எனை ஏன் மறுக்கிறாய்
என்ற என் இதழ்களின் வினா உன்
செவிகளுக்குள் சென்றன
காற்றைவிட சுதந்திரமாய் ...
பதில் சொல்வதாய் நினைத்து நீ
எனைப் பார்த்து சொன்னாய் ...
உனைப் பார்க்க விருப்பம்
இல்லை என ...
பின் ஏன் பார்த்தாய் என்றேன்..?
உனது செவ்விதழ்குழிய கடித்து,
இமைகளை இருக்க
மூடிக்கொண்டாய்...
ஆனால் எனக்குத் தெரியும்...
அங்கும் நீ எனைப் பார்த்துக்
கொண்டுதான்
இருக்கிறாய் என்று ...

விசித்திரமான உலகம் நீ...

விசித்திரமான உலகம் நீ...
ஏனென்றால்
நீ மட்டும்தான்
உன்னுள் வாழும் என்னையும்.,
உன்னை
பார்ப்பவர்களையும்
சுற்றவைக்கிறாய் ....

மீண்டும் மீண்டும்...

உன்னை நினைத்த பொழுதுகளில்
உன்னை மறக்கத்துடித்தேன் ...
மறந்த பொழுதுகளில் நான்
எங்கிருந்தேன் ...
உன்னை மறக்க
நினைத்து தோழ்வி காணுகிறேன்..
தோழ்வி வெற்றிக்காண
படிக்கட்டுக்களாமே ...?!
எத்தனைப் படிக்கட்டுக்களைக்
கடந்து விட்டேன் ...
ஒருமுறைத் திரும்பிப்பார்த்து
தலைசுற்றி சரிந்து விழுந்தேன் ...
எத்தனை அடிகள் பட்டாலும்
விழுவது உன் மடி என்றால்
எத்தனை முறை வேண்டுமானாலும்
விழலாம் ...
ஆனால் உன் விழிகளில் கூட விழாத
போது அழுகை பீரிட்டும் கண்ணீர்
கட்டிப்பட்டு வெளிவர
மறுக்கிறதே
என்னென்று சொல்வது ...
ஏறத்துணிகிறேன்
உன்னை மறந்தே விடுவதென்று....
மீண்டும்... மீண்டும்...

இரகசியம் உணர்கிறேன்...


தனிமையின் இரகசியம்
உணர்கிறேன் ...
கூட்டத்தில்
நின்று பேசும்பொழுது என்னைப்
பைத்தியக்காரனாகக் கூட பார்காத
உலகத்தை நான் பார்கும் தண்டனை ...
ஆயிரம் மக்கள்
முன்பு அழுகிறேன்...
ஆகாயம் அதிர சிரிக்கிறேன்...
அணுஅளவும் அசரவில்லை இந்த
சிந்தைக் கூட்டம் ...

மறந்துவிடாமல் வா...

பறந்து பறந்து திரிகிறேன்....
இறங்கத் தெரியவில்லை...
என்னை இறக்கிவிட வா....
வரும் போது மறந்துவிடாமல் வா....
எப்படி இறங்குவது என்பதை....

குப்பை...

சுத்தம் செய்ய குப்பைகள்
கிடைக்கும் வரை
சுத்தமாய் இருக்கும்
குப்பை அள்ளுபவனின்
வாழ்க்கை...

தினம் தினம் கொண்டாட்டம்....

நீ இன்று பிறந்ததற்காக
இன்றய நாளைக் கொண்டாடுகிறாய்....
நானோ....
நீ பிறந்த நாளை
அறிந்த நாள் முதல்,
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுகிறேன் ....

உன்னோடுதான் என் சுகம்....

உன்னை நினைப்பதைவிட
உன் நித்திரையில் கனவாவதே
சுகம் ...
உன்னை பார்ப்பதைவிட
நீ கண்டு ரசிக்கும் ஓவியமாவதே
சுகம் ...
உன்னுடன் பேசுவதைவிட
நீ பேசும் மொழியாவதே
சுகம் ...
உன் சோகத்தில் நான்
தவிப்பதைவிட
தவிக்கும் உன்னைத் தைரியப்
படுத்துவதே
சுகம் ...
உன் துக்கத்தில் நான்
துயிலுருவதைவிட
தவிக்கும் உனக்குத்
துணை நிற்பதே
சுகம் ...
உன் தோல்விக்கு வருந்துவதைவிட
உன் வெற்றிக்கு வழி வகுப்பதே
சுகம் ...
உன் அழுகையின் கண்ணீராவிட
உன்னைச் சிரிக்கச்செய்து
உன் சிரிப்பின் ஒலியாவதே
சுகம் ...
உன்னுடன் நடப்பதைவிட
நீ நடக்கும் பாதையில்
பலியாகும் எறும்பாவதே
சுகம் ...
உன் கால்களில் கொலுசாய்
இருப்பதைவிட
உனது காலடி ஓசையாய் இருப்பதே
சுகம் ...
உன் கைகளில் வளையலாவதைவிட
உன் உள்ளங்கை ரேகையாவதே
சுகம் ...
உன்னுடன் உண்ணுவதைவிட
நீ உண்ணும் உணவில்
ஊட்டச்சத்தாவதே
சுகம் ...
உன் கூந்தலில் மலராவதைவிட
உன் கூந்தலின் வாசமாவதே
சுகம் ...
உன் காதுகளில் தோடாவதைவிட
உன் செவி சேறும்
இசையாவதே
சுகம் ...
உன் முகத்தில் மஞ்சலாக
இருப்பதைவிட
உன் நெஞ்சத்தின் நேசமாக
இருப்பதே
சுகம் ...
உன் அணைக்கும் போர்வையாவதைவிட
நீ அணைக்கும் பொம்மையாவதே
சுகம் ...
உன் இதழ்களை சுவைப்பதைவிட
உன் இதழ் வெடிப்பின் ஈரமாவதே
சுகம் ...
உன்னுடன் வாழ்வதைவிட
உனது வாழ்க்கையாவதே
சுகம் ...
நான் உனது உடலோடு கலந்து
உறவாடுவதைவிட
உனது உயிரோடு உறவாடும்
உணர்வாவதே
சுகம் ...
சுகம்......
சுகம்.........

மீண்டும் ஒரு சம்பவம்...

என்னவோ நினைத்தாய்
என்னை அழைத்தாய்
என்ன ..!? என்றேன்
எழுந்து வந்து
என்னிடம் தந்தாய்
இனிப்புகளை ...
எதற்கென்றேன்...
இன்று நான் பிறந்தேன் என்றாய்...
இனிமையாய் வாழ்த்தினேன்...
இருக்கட்டும் என்றாய்...
எவனுக்கும் கிடைக்காத வரம்...
பல காலம் படையளிட்டுக்
காத்திருந்த பக்தனுக்கும்
கிட்டாத வரம் ...
எனக்கு கிட்டியதே...
கடன் வைத்தேனும்
காணிக்கையளிக்க நினைதாதேன்...
பச்சைநிறப்பேனா அவளுக்குப்
பரிசளித்தேன் ...
இன்னாள்...
நன்நாள்...
பொன்னாள்...
இன்னொருநாள்...
நீ என்னை அழைக்கவில்லை
இனிப்புகள் கொடுக்க வில்லை...
ஏன்...? என் நினைவே
உனக்கில்லை....
என்றாலும்...
என் வாழ்த்துக்கள்
என்றும் உனக்குண்டு...
நான் இறந்த பின்னும்கூட
என் நினைவுகள் உன்னைச்
சுற்றும் ...
இல்லை... இல்லை...
இனி நான் இறந்தால்
மட்டுமே என் நினைவுகள்
உன்னைச் சுற்றும்
சரிதானே .....?

நெருடல்...

நேற்றய பொழுது நினைவிருக்க...
நெஞ்சமதில் நிலைத்திருக்க...
நேற்றுவந்த நிலவு அது...
நித்திரையில் லயித்திருக்க...
நிம்மதிப் பெறுமூச்சுவிட
நெஞ்சம் கொஞ்சம் நெருடும்...
எதிர்காலக் கனவிருக்க...

அப்பாடா... இந்த உலகத்திற்கு ஆயுசு கெட்டி...

அமைதியாய் ஒரு நீரோட்டம்...
அதில் சல சலக்கும் போராட்டம்...
எனக்குள் இருந்தால்...
"இப்படி"யேனும்
அருவிகொட்டும்...
பெண்ணே உனக்குள் எழுந்ததால்
உறைந்தள்ளவோ உயர்கிறது ...
இமயம் ஒன்றும் உயரம் அல்ல...
உன் இமையின் கருவுக்குள்
உறைந்துயர்ந்த
துயரங்களின் முன்பு ...
நீ உடைபடும் வரை
உறுதியாய் நம்புவேன்,
உலகம் நீரால் அழியாது...
ஒவ்வொரு நொடியும்
உனக்காக வாழ்வேன்..
உன் விழி நீரால் வழியாது...
நீ புன்னகை பூப்பதால்..
உனைப் பூ என்றனர்...
பூவிற்குவமை நீயென
என் மனம் கொள்ள வில்லை..
நீயே பூவிற்குவமையென
என் நா மொழிந்தால்
பூக்கள் எனைக் கொல்வதுமிலை...
ஏய்...இப்போது நீ
சிரித்தாயா...?
அப்பாடா...
இந்த
உலகத்திற்கு ஆயுசு கெட்டி...
அடடே சிரிப்பப் பாரு.....:-)

யான்...

நான் உன் நிழலாய் இருப்பதை
அறியாமல் நீ
இருளுக்குள் சென்றாய் ...
பின் அறிந்து அழுதாய்...
உன் கண்களின்
ஈரக்கசிவு கலப்படமற்றதாய்
வழிந்துருக வழிந்துருக ....
வதைபட்டேனடி நான்...
வலிகொண்டு கதறும் என் சப்தம்
உன் செவிசேர நியாயம்
இல்லைதான் ...
நீ என்னை தொலைத்ததாக
நினைத்து அழுகிறாயா ..?
இல்லை நான் தொலைந்ததாக
நினைத்து அழுகிறாயா ..?
அர்த்தமற்றதாய் உன்
அழுகை அர்த்தம் சொல்ல
துடிப்பதை உணர்கிறேன்...
நீ என்னை தொலைக்கவும் இல்லை...
நான் தொலையவும் இல்லை...
நீ வெளிச்சத்தில் மிளிரும்
நிலவாய் இருந்த போது நான்
நிழலாய் இல்லை ...
ஆனால் இருந்தேன்..
அன்று உனக்கு நிழலில்லை...
அங்கு நீ நிழல் தேடவில்லை...
இன்று நீ உன் இமைகளை இருக்க
மூடி அழுகிறாய் நிழல் தேடி ..
நீ எனை நிழலெனக் கண்டதெங்கே.?
புரியாதப்
புதிருக்கு விடைசொல்லி நீ
புன்னகைத்தாய் ..
நீ புரிந்துகொண்ட வினாவிற்கு
விடைசொல்லத் தயங்குவதேன் ..
சரி,போதும்..
சற்றே திற உன் கண்களை..
கரைபடிந்த கண்ணங்களை
கரங்கள் அரவணிக்க
தெளிந்த நீரோடையில்
உன் பார்வையில் நெளியும் யான்...
உன் நிம்மதியாயும் யான்...
உன் நெருடலாயும் யான்...
உன் நிழலாயும் யான்..
உன் நித்திரையாயும் யான்..
நீயாயும் யான்..

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...