என்னவோ நினைத்தாய்
என்னை அழைத்தாய்
என்ன ..!? என்றேன்
எழுந்து வந்து
என்னிடம் தந்தாய்
இனிப்புகளை ...
எதற்கென்றேன்...
இன்று நான் பிறந்தேன் என்றாய்...
இனிமையாய் வாழ்த்தினேன்...
இருக்கட்டும் என்றாய்...
எவனுக்கும் கிடைக்காத வரம்...
பல காலம் படையளிட்டுக்
காத்திருந்த பக்தனுக்கும்
கிட்டாத வரம் ...
எனக்கு கிட்டியதே...
கடன் வைத்தேனும்
காணிக்கையளிக்க நினைதாதேன்...
பச்சைநிறப்பேனா அவளுக்குப்
பரிசளித்தேன் ...
இன்னாள்...
நன்நாள்...
பொன்னாள்...
இன்னொருநாள்...
நீ என்னை அழைக்கவில்லை
இனிப்புகள் கொடுக்க வில்லை...
ஏன்...? என் நினைவே
உனக்கில்லை....
என்றாலும்...
என் வாழ்த்துக்கள்
என்றும் உனக்குண்டு...
நான் இறந்த பின்னும்கூட
என் நினைவுகள் உன்னைச்
சுற்றும் ...
இல்லை... இல்லை...
இனி நான் இறந்தால்
மட்டுமே என் நினைவுகள்
உன்னைச் சுற்றும்
சரிதானே .....?
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment