பூட்டிய இமைகளாயினும்
பொல பொலவென
வழிகிறது கண்ணீர்...
கண்களுக்கெட்டா
தொலைவுக்கு சென்றவள்
கனவுகளுக்குள்
எப்படியோ வந்துவிடுகிறாள்...
கல்லென மனதை
கனமாய் வைத்தாலும்
கணப் பொழுதில்
அவளோ ஐந்து
வயது குழந்தை
பொறுமையின்றி
கடலைமிட்டாய்
தின்பதுபோல்
கடுக்கு மொடுக்கென்று
நொறுக்கித்தீனிபோல்
கடித்துத் தின்றுவிடுகிறாள்...
அந்தச் சத்தம் கேட்டு
அலரியெழும்போது
அலைஅலையாய்
கண்முன்னே கறைந்து
பின்பு அசரீரியாய்
புன்னகைத்து
பூட்டிய கதவுபுகுந்து
பூதப்பூவாய்
சென்று விடுகிறாள்...
எழுந்தமர்ந்த நான். .
இரு தொடைகளுக்குப்
பக்கத்தில்
அழுத்தமாய் பதிந்த
கைகளை மெல்ல
எடுத்து
தொங்கிய தலையின்
முகம் புதைத்து
காற்றைக் குரலாக்கி
குலுங்கி குலுங்கி
நிசப்தமாக அழுகிறேன்...
வழிகிறக் கண்ணீர்
சிலதுளியெனினும்
சிவப்பு கந்தகத்தின்
நீல நெருப்புச்
சுவாலை
பிஞ்சுக்குழந்தையின்
விரல்பட்டு
வெந்து, வீரிட்டு
அழும்போது
ஐயோ எம்புள்ள என
அலரியபடி வாரியணைக்கும்
அன்னையவள்
படும் துயருக்கு
நிகராய் இதையும்
சொல்லலுவேன் நான். ...
வலிக்கிறதம்மா....
என் கனவுகளுக்கு
ஏனோ கடவுள்
கதவு வைக்க
மறந்துவிட்டான்...??