ஏதாவது சொல்..
என்ன சொல்ல...
ஏதாவது.....
ம்ம்ம்.....
நீயே சொல்......
ஏய்.... நீயே சொல்லேன்....
நீ சொல்லு....பா....
என்னமா சொல்ல...??
எதுவுமே இல்லையா சொல்ல...??
எவ்வளவோ இருக்கு சொல்ல...
ஆனால் என்ன சொல்லனுதான் தெரியல...
சரி நீ சொல்....
மறுபடியுமா....
லூசு...
நீயே சொல்லு....
நான் என்ன சொல்ல....
நீதான் சொல்லேன்....
அப்ப போ... நா போறேன்...
ஏய்யேய்... இரு இரு....
நானே சொல்றேன்...
ம்ம்ம்.... சரி சொல்லு....
என்ன சொல்றது.....ம்ம்ம்ம்......
ப்ச்.... ஏதாசும்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
ம்ம்.....ம்ம்ம்ம்... சொல்லு....
நீயே சொல்லேன் பா....
அட அரலூசு..... பே.....
நீ ஒன்னும் சொல்ல வேணாம்....
ம்ம்ம்ம்ம்..........
............
............
.........
.....
ஓய்.......
ஹூம்.........
அட..... பார்ரா.... கோவத்த....
சரி நான் ஒன்னு சொல்லவா....??
...........................
ஓய் இங்க பாரேன்......
.......ம் என்ன?...
....சொல்லுறேன் கேளேன்...
....என்ன சொல்லபோற??
....ஒரு கதை!!!???
..ம்ம்ம்ம் கதையெல்லாம் தெரியுமா உனக்கு....
தெரி.....யும்....
ம்ம்ம்... ச....ரி... சொல்லு...
ம்ம்ம்.. எப்டி சொல்ல....
வாயாலதான்....
ஹா ஹா.... சரி....
ம்ம்ம்....
ம்.............
நீ சொல்லா...........த் தருணம்
பொல்லாததாய் போகிறது எனக்கு...
...
நின் சொல் இல்லா தருணம்
எனை கொல்லென கொல்கிறது....
...
உனை முதன்முதலில் கண்ட அந்தநாளில் எனக்குள்
ஏதோ ஊடுருவி குட்டி குட்டியாய்
பலகோடி அணுக்கள் ஒன்றாய் பற்றிக்கொண்டு....
இதயத்தின்
சற்று கீழே பட்டாசுபோல்
மொத்தமாய் வெடித்து உயிரெல்லாம்
படர்ந்த கதை சொல்லவா??
...
உன்னிடம் ஏதோ சொல்ல தவித்த
அந்த பொழுதுகளில் எத்தனை
யுத்தங்கள் எனக்குள் சத்தமின்றி
நிகழ்ந்து இரத்தக்களரியானது அந்தக் கதை சொல்லவா??
...
உன்னை காணாத விடுமுறைகளுக்குள்
காலமாகிப் போன என் சந்தோசங்களின் நிலைபார்த்து புலம்பிய சோகத்தின்
ஒப்பாரிகேட்டு நான் அழுத கதை சொல்லவா...?
....
இல்லை..அதற்கடுத்தநாள்
உறங்கா இரவுகழிந்து அதிகாலை
குளிரோடு நீராடி....
உணவிறங்கா பொழுதுகளில்
தாயோடு போறாடி...
கல்லூரிக் காவலாளி கண்விழிக்கும் முன்னாலே....
காணாத கடவுளை காணும் நிலை
கொண்டு....
ஈட்டிவைத்த இரும்புக்கதவறுகே...
இத்துப்போன இதயத்தோடு
இரண்டறைமணி நேரம்
செத்துவிடாமல் காத்திருந்து
உன்னைக் கண்டு பின்
உயிர்பிழைத்த கதை சொல்லவா..?
...
எப்படியேனும் சொல்லிவிட
வேண்டுமென நான்
ஆயிரம் ஒத்திகைபார்த்து
அத்தனை வல்லமைபூட்டி
காத்திருக்கும் ஒவ்வொரு நாளும்...
நின் வருகை எங்கோ
தென்பட்டதும் சொல்ல நினைத்த
அத்தனை சொற்களும்
இன்றுபோலவே
கொல்லப்பட்ட சோகக்கதை சொல்லவா?
...
இன்றில்லை நாளை நாளையென
என் செல்களில் எல்லாம் சொல்கடத்தி
சேமித்தகதை சொல்ல வா..?
....
அன்று ஒருபொழுது அரைத்திருந்த சொற்களை மீண்டும் அதற்கடுத்தநாள் கடத்த முயன்று முடியாமல்
அரைகுறையாய் சிந்தி
உன்னிடம்
அகப்பட்டக் கதை சொல்லவா..?
...
நான் சிந்திய சில சொற்களை மீட்டெடுத்து சிதறாமல் உன் நாணம்
கோர்த்து...
நீ சிரித்துக் கொண்டே சிக்கிக்கொண்ட
சிலிர்ப்புக்கதை சொல்லவா...?
...
இல்லை நான் சொல்லாமல் போயிருந்தால் எங்கும் இல்லாமல்
போயிருக்கும் அந்த இல்லாக் கதை சொல்லவா...??
...
......
..........
.............
நீ ஒன்னும் சொல்ல வேணாம்.....
ஹேய்..... என்னாச்சு......
....
....
ம்ஹூம்.....
அட கிருக்கி.....
ஏன் அழற...?
......
......
......
ஹேய்...எதாவது சொல்லேன்......
No comments:
Post a Comment