Friday, March 16, 2018

விடை

அறி வினா தொடுத்து
ஆவலோடு புத்தனின்
பொறுமை அகமேற்று
பூவையின்  இதழ்பொழியுந்
தேன் நாடி தவித்திருந்தேன்...

மறை விடையாய்
சுடும் விழிபார்வை வீசி
நேரிடை நெஞ்சில்
நெருஞ்சியேற்றி
நித்தமொரு சொட்டு
வெந்து வழியும்
போரிடும் கோபம்
பொய்யாய் காட்டி
பின் புன்னகைத்து
நேர் விடை நீ நவிழ

இதயமதிர்ந்து இடரி
விழுந்தேன்....

இனி எழுதல் இயலாதடியே...

~ ☆ ~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...