அகர முதல எழுத்தெல்லாம்
ஆசான் தந்த வரமன்றோ
இயல் இசை நாடகமும்
ஈன்றெடுத்த எந்தமிழை
உயிரோடு உலவவிட்டு
ஊணோடு படறவிட்டு
எத்திசையும் எதிரோலிக்கும்
ஏகமொழியதைனை கர்சிக்கும்
ஐயானனமாய் எனைமாற்ற
ஒப்பிலா திருமகளாம்
ஓங்காரி தமிழன்னை மகவு
ஔவியமறியா
அஃறிணையான எனை
கரம் பிடித்துகறை சேர்க்க
காகிதத்தில் கருவேற்றி
கிரகிக்க வகைசெய்து
கீதையும் குரானும் சொல்லும்
அன்பெனும் தத்துவத்தை
அறிந்திட அணுப்பொழுதும்
உழைத்திட்ட
உன்னதமானவர்களுக்கு
உள்ளம் கனிந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..
அன்புடன்,
ம.முத்தரசு
~☆~
No comments:
Post a Comment