Friday, March 16, 2018

ஆசான்கள் தினம்

அகர முதல எழுத்தெல்லாம்
ஆசான் தந்த வரமன்றோ
இயல் இசை நாடகமும்
ஈன்றெடுத்த எந்தமிழை
உயிரோடு உலவவிட்டு
ஊணோடு படறவிட்டு
எத்திசையும் எதிரோலிக்கும்
ஏகமொழியதைனை கர்சிக்கும்
ஐயானனமாய் எனைமாற்ற
ஒப்பிலா திருமகளாம்
ஓங்காரி தமிழன்னை மகவு
ஔவியமறியா
அஃறிணையான எனை
கரம் பிடித்துகறை சேர்க்க
காகிதத்தில் கருவேற்றி
கிரகிக்க வகைசெய்து
கீதையும் குரானும் சொல்லும்
அன்பெனும் தத்துவத்தை
அறிந்திட அணுப்பொழுதும்
உழைத்திட்ட
உன்னதமானவர்களுக்கு
உள்ளம் கனிந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

அன்புடன்,
ம.முத்தரசு
~☆~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...