Saturday, February 25, 2017

நீளக் குருங்கவிதைகள்...

தூயத் துளிகள்
தூரத் தூர
நனைவோம் வா
பின் தும்மல்களோடு
தலை துவட்ட உன்
ஈர முந்தானை முனை போதும்...
~☆~

நெருப்பின் நிழலில்
குளிர்காய நீ வேண்டும்....
நெருப்போடு காய
உடல் மட்டும் போதும்....
~*~

வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா

~*~

வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா

~*~

காதல்
எனக்கு பழகிப்போன வலியை பலவழிகளில் தரும்
போதிமரம்

~*~

சாளரத் தென்றல்
இல்லாப் பொழுதிலும்
சாமரம் விசிரிட நீ வேண்டும்....
நான்
சத்தமின்றி உன் மடியுறங்க
அரசு விடுமுறை தினம்
வேண்டும். .
.
~☆~

கலக்கம் வேண்டாம்...
காதலுக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை....
கவிதைகளுக்கு பக்கத்தில்
கனவு விரித்து சற்று
கண்ணயர்ந்த பொழுதுகள்
மணம் மாறாமல் இன்றும்
திரிகிறது. ...
~☆~

மயக்கும் மயில் தோகை வண்ணம்
வருட வருட மறந்தது
மனம்

~*~

எப்பொழுதும் உள்ளிருந்து
வருவதில்லை கவிதை....
நீ உடன் உள்ள போது
வருவதேயில்லை கவிதை...

~☆~

இராஜாலி நான்
உன்னைத் தேடவே பிறவி எடுத்து
உயரே பறக்கிறேன்....

~*~

கவிதைகளுக்கு கின்னஸ் சாதனை
தருவார்களா??
போட்டியிட நான் தயார்
காதல் தந்த வரம்....

~☆~

சகா வரம் தா...
இல்லையேல் சாவுக்கும்
கற்றுத் தந்து விடுவேன்
காதலால் கொலை செய்து
கவிதைகளால் உயிர்த்தெழ.....

~☆~

மெய் எழுதி
பொய்தக் கவிதை
நம் காதல்

~*~

நிலா நீ உவமை
அவள்
உயிர்வடிவம்

~*~

கதைக்காத கதையாய்
சிதைபட்ட சிதை
என் காதல்

~*~

என் வலி 
உன் சிரிப்பில் 
ஒலிக்கிறது

~*~

முட்கள் தீண்டித் தீண்டி
தீட்டிய வண்ணம்..
சிவப்பு ரோஜா

~*~

ஐயம் எனக்கு இல்லை
உன்னுள் இரண்டிதையம்
குறையாமல் உண்டு....

~*~

யாழ் நாண்
சுண்டி இழுக்கிறாய்
பாழ்பட்டேன் நான்

~*~

திருட்டுக் கவிதைகளா உனதென்றாள்.....
திருட்டுப் போனதால்
வந்ததென்றேன்....
திருடியது யாரென்றால்.....
நீ என்றேன்....

~☆~

மணக்காத
மலர்ச் செண்டு வாங்கினேன்
மனம் மலர்ந்துச் சென்றால்
குழந்தை....

~☆~

வா
காத்திருத்தல்
வரமா சாபமாவென
அறிய ஆவல் எனக்கு

~*~

எவனோ எழுதியப்
பாடலை
அவளுக்குப் பிடிக்குமென
பாடச் சொல்லிக் கேட்டாள்.....
முடியாதெனச் சொல்லி
எனக்குப் பிடித்த
அவளைப் பற்றி ஒருப்
பாட்டெழுதிக் கொடுத்தேன்....
என்னையே பிடித்துப் போனது....

~☆~

தீடீரென கொட்டும்
கவிதைகளுக்கு காரணம்
கேட்கிறது நட்பு....
எனக்குத்தான் காதல் இல்லை....
இருப்பவர்களுக்காகவும்
இருந்தவர்களுக்காகவும்
இருக்கட்டுமென சில கிறுக்கல்கள்
எனச்சொன்னேன்....

~☆~

ஓட ஓட விரட்டுகிறாய்...
கூட வரச் சொன்னால் முறைக்கிறாய் நீ...

~☆~

வார்த்தை ஜாலங்கள் தெறியாது எனக்கு.....
பிய்த்து எரிகிறேன்
கவிதையாகிறது....

~☆~

சுடச் சுட இட்டிலி...
சுவையான சட்டினி...
கப கபக்கும் பசி...
கயிறின்றி கட்டிப் போடுகிறது
காதல்....

~☆~

தை....
நீ கிழித்த இதயத்தில் வழிகிறது உயிர்

~*~

வை
உன் குரல் கேட்கவே சேட்டை செய்கிறேன்...

~*~

விலாசம் சொல்லும் மல்லி
கூந்தலூர்த் தேடி
பின்தொடர்கிறேன் நான்...

~*~

நீளப் பெருங்கடல் பேதையில்லாத் தீவில்
போதையுடன் நான்...

~*~

மஞ்சள் குங்குமம்
கற்சிலைகள் மீதே கடைசிக்காலம்

~*~

காந்தச் சுரங்கம் நீ
இரும்பாய் இல்லாததால்
ஈர்க்காமல் போனதோ
இதயம் 

~*~

வெற்றிடம் நான்
எனை நிறப்பும்
வெறுமை நீ


~*~

கருந்திரை,வெண்குண்டு
பார்க்கும் போதெல்லாம்
போர்க்களமாகிறது மனம்


~*~

உனக்குப் பிடித்த வண்ணம்
என்னையும் பிடித்தது
~☆~


பசுமை நினைவுகள்
நீளப் பெறும் கனவு...


~*~

கவிச்சக்கை சுவற்றில் 
காதல் சாறு...


~*~

கனவின்
மரபுவழி கவிதைகள்
பிறப்பது காதல் எனப்படும்


~*~

Wednesday, February 22, 2017

வரம்.

பெறும்மழை
பெற்றெடுத்த
ஈரப்பொழுதுகளில்
நாம்
நனைந்து கொண்டே
நடைபயின்ற
நினைவுகள்
புன்னகையாய்
துவட்டுதல்
வரம்.
~*~

வலி

எனது காயங்களோடு
எழுதப்பட்ட கவிதை
ஒன்றை வாசிக்க
தொடங்கயில்மட்டும்
என்னவோ.......
என் இதழில் ஓரம்
ஒரு சிரிப்பு வந்து
உண்மையாகவே
ஒட்டிக்கொள்கிறது.............
~*~

மீண்டும் கவிதைகள்

தலைக்குமேல் 
திறந்த வானம் ....
தொலை தூரம் சென்று 
தொலைந்து விட துணிகிறேன்....
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே 
இருக்கிறாய் நீ மட்டும்
துணையாய் .....
அனேக நாட்கள் கழித்து 
மச்சில் படுத்து 
மேகம் தேடிய தருணம் ...
தேகம் சிலிர்த்த தென்றலின் 
சாரத்தோடு சிந்தையிலிருந்து 
எகிரி குதித்த எண்ணச் சிதறல் ...
:)
~*~

புத்தன் ஒருவன் புன்னகைகிறான்

வினோதமான ஒரு மிருகம்
உள்ளே
வீறிட்டு அழும்போது ....
புத்தன் ஒருவன்
புன்னகைகிறான் என்
பூதக்கண்ணாடியின் 
முன்னே....
~*~

மகளதிகாராம்



























காலையில் எழுந்ததும்
கவிதையோடு
தடுமாற்றம்...
உயிர்மேல் வழிந்து 
உன் உள்ளம் தொடும்
எனது எண்ணங்களை
எண்ணமிட தொடற்கையில்
உவகை பூக்கிறது
உள்ளத்தில்...
வயல்வெளியில்
நடைப்போட்டு-உன் 
கயல்விழியில் கடைபோட்டு. . .

சீனிமிட்டாய் 
சிரிப்புவாங்க நான்
சில்லரையாய் 
சில சிந்தனைகளை 
சிறிது சிறிதாய் 
சிந்தி விட்டேன்...

உன் மிட்டாய் புன்னகை 
மெழுக்குபோல் 
வழிந்தோட என் சட்டை 
துளைத்து நெஞ்சம் நனைகிறது....

என்னே இனிமை...

உள்ளிருந்த இதயம்
உடுக்கையை நிறுத்தி...
புல்லாங்குழல்
இசைத்த
அந்த
நொடியுணர்ந்தேன்.....­.
மந்திரம் தெரியாத மாயாக்காரி
என் மகள்.....
~*~

சுட்ட சொல்

சிதறிய மழைத்
துளியினும்
சிறியதாய்
விழுந்தது
சொல்லறித்த
மனம்..

~*~

பொறி

உன்னுடன்
பேசிய நாட்க்களென
எதுவுமில்லை..

பேசத்துடிக்கும்
பொழுதுகளும்
கிட்டவில்லை...


எனினும்
எழுத்துக்களை
எண்ணிக்
கோர்த்து ஏவுகிறேன்...

ஏதேனும்
ஒரு எழுத்தின்
கொண்டையில்
உன் புன்னகை
சிக்கிவிட்டாமலாப்
போய்விடும்?

~*~

Tuesday, February 21, 2017

விழித்துக்கொள் தமிழா...

கடைசி
விவசாயியின்
அழுகிய உடலில்
நெளியும் புழுக்களை
வறுத்து உண்ணும் 
நிலை வரும் வரை
அவனின் அருமை
நமக்குத் தெரியாது...
ம.முத்தரசு
~*~

தனிமை

தனிமை
உற்சாக பாணத்தின் உரிமை...
மறைக்கப்பட்ட உண்மை ...
வெளிவராத நூல்
இசைக்காத மிருதங்கம்
இசைக்கேங்கும் உயிர்
உணராத தாகம்
உதிரத்தோடுதிரும் கண்ணீர்
வற்றிப்போன குட்டை
வறண்டு நிர்க்கும் தேகச் சட்டை
வண்மையோடு நா
மென்மையோடு இருதயம்
சூலமாகும் சொற்கள்
சுடச்சுடப் பசி
செவியடைக்கும் மௌனம்
செயலிலக்கும் கற்பனை
சீற்த்தோடு வலி
சின்னதாய் ஒரு சிரிப்பு
சிலிர்த்துப் பறக்கும் ஆன்மா
தின்று கொலுத்த எறும்புகள்
சிதிலமடைந்த சிதையாய் நான்...
சிந்தனையின்றி நீ...
~*~

மகளதிகாரம்..

என்னுளிருந்து வந்தவளே
ஏகாந்தத்தின் அர்த்தஞ்சொன்னவளே

உன்விழி நகைத்திட
உள்ளே எங்கேயோ 
ஊற்றோன்று பெருகுதடி...

உனக்கென்ன அவ்வளவு
அன்பா என்மீது...


நேற்றுவரை என்னை
நேசிக்க
என்தாயோடு 

போட்டியிட்டவளோடு
போரிட வந்தாயோ...


இல்லை
அவளினுள் அவளாய்
அவளே அவதரித்து
அடியேனை ஆழ்கடல் அன்பினில்
அமிழ்த்திட துணிந்தாலோ?..


ஆகா மனம் மகிழுதடி...


ஆகாயமாகியே திரியுதடி...


உன்மென்பாதஞ் சுவடிடும்
முதல்தரை என் மார்பாகிப் போகாவிடில் 

அதை கூராக்கி சிதைப்பேனடி...

எந்தையென 
நீ மகிழும் 
உனதழகை எப்போதெங்கே
காணுவேனோ...


அப்பொழுதினில்..


அகங்குளிரும் கர்வத்தோடு
அளவளாவித் திரிவேனே
மதிகெட்ட சித்தனொத்தே....
~*~

என் செல்லச் சொப்பனமே...

உள்ளே உழுதிட்டு
விதைத்தவளே...
ஊறும் வேரின்
ஆழம் அறிந்திடவோ
நீ விழுதாய் வளர்திட்டாய்...
வா...
வளரு...
தொடு...
துளை...
தூணாகு...
தூரத்தோண்டு...
திருகிச் செல்...
திறம்பட நில்...
திணறல் கொடு...
மென்னிதையம் தேடு...
மெல்லிசை உணர்...
மெய் மற...
மெல்லச் சுற்று ...
மிருதங்கம் இசைக்கும்...
மிருதுவாய் துளை...
மின்னலோடு நுழை...
மிரளாதே...
மீளாச் சொற்கம் புகும்
என் செல்லச் சொப்பனமே...
~*~

அடியே வேடுவச்சி...

அடியே வேடுவச்சி...
அம்பெய்த வேலையிலேயே
அன்பெய்திச் சென்றவளே...
தப்பிச்செல்லக் கூடாதென
தப்பாக்குறியிட்டவளே...
தவிக்குதடி மனசு
உன்ன தாவிபிடிச்சிடத்தான்...
ஆடும் மயிலொத்து
மழையாடி நின்னவளே...
மழிக்காத முகத்துக்கு
மச்சம்போல ஒருமுத்தச் சாயம்
நீ மிச்சமாக விட்டுப் போனா...
எக்கச்சக்க காதலோட
எச்சமாயாசும் கிடப்பேன்டி...
நீ வரும்பாத வடிகட்டி
வகிடெடுத்த தலையாட்டம்
நீர்மொழுகி வச்சேன்டி...
மண்வாசம் மேனிவீச நீ
வாடக்காத்தா போவும்போது...
புஞ்சவனப் பொட்டக்காடா
புழுதிவீசி கிடந்த நெஞ்சு...
நாழு போகம் விளைச்சலோட
நஞ்சயாகி போனதடி...
நடபோடும் இடபாத்து
நாக்குமுழுங்கி நின்னவன...
ஓரவிழி கூராக்கி ஒத்தப்பார்வ பார்க்கயில...
உசுருக்குள்ள உன்னகத்த
ஒன்னொன்னா நட்டவளே...
காமாச்சி கற்பகமோ
கூடபோர தோழிக்கிட்ட
கதகதயா கதைச்சுகிட்டு
கழுக்குன்னு சிரிக்கயில
வழுக்குதடி எம்மனசு...
வருசக்கணக்கா ஆசவச்சு
உம்புருசனாக வேணுமுன்னு
உசுரெல்லா நெனச்சுருக்கே...
நீ குத்தவச்ச நாளுதள்ளி
நாம்பாத்த தாவணியே...
முதப்பார்வ தரைப்பூக்க
முத்தப் பார்வ இட்டவளே...
உனக்குள்ள என்ன வச்சி
ஊமச்சியா நின்னவளே...
மண்டக்குள்ள களிமண்ணா
எனக்கொன்னுந் தோனாம...
என்னடி கருவாச்சி இந்த
முழி முழிக்குரவனு ஏகத்தாளமா நா கேக்க...
வெட்டிப்பய என்ன பார்த்து
உருப்படியா ஒத்தவார்த்த
உருட்டிதெரட்டி சொன்னவளே...
ஓ வார்த்த கேட்டதுமே
உசுரல்லா வெடவெடக்க
வேர்த்து ஊத்தி நின்னேன்டி.
இப்பக்கூட அந்த நேரம்
நித்தம் நித்தம் நெஞ்சுக்குள்ள
நிக்காம ஓடுதடி...
எனக்குன்னு பொறந்தவளே
நமக்குன்னு நாம் பொறக்கும் நன்நாளு
தேடித்தான்டி
நாளெல்லாந் தவங்கிடக்கே...
அந்நாளு வரும் வரைக்கும்
அங்கனயே நீயிரு...
இங்கனயே நாயிருக்கே...
~*~

சண்டை

வழக்கம்போல் 
உன்னோடு 
சண்டையிட்டு வந்து 
படுத்துக் கொண்டேன்...
விழித்ததும் 
வாட்டியது
தனிமை...
~☆~
நான் கிறுக்கிய 
சில எழுத்துக் கூட்டங்களை
நீ படிக்கும் போது
தானாய் உனக்குள் 
நிகழும் மாற்றங்கள்
சூட்டும் பெயரையே 
அதற்குத்தலைப்பாய் 
வைத்துவிடு

~*~



ல்ல்

மகளதிகாரம்

உன் கண்சிவந்த மாத்திரத்தில்
கைகளுக்குள் 
புதைபட்ட வானத்தை
வலையாக விரித்து 
விரைகிறேன்
உன் விரல் தொட்டு 
மறைந்த பட்டுப்பூச்சியை
சிறைபிடிக்க.

~☆~

விந்தைப் பெண்....

செவ்வாய் மினுக்கும் வெளி நோக்கி....
செவ்விதழ் பிரியா மொழி பேசி...
இடப்புற உடுக்கை தாலாட்ட...
இயல்பே யாதென இமை மறக்க...
எங்கும் மெய்யுடன் உன்வாசம்
ஏகன் எனதுயிர் ஈர்கிறதே...
பரந்தப்பெறுவெளி கொள்ளாதோ
உன் நேசப் பேரொளி விரிகிறதே...
பேசா மடந்தை சிலவேலை
பேதை நீயெனவறிவேனே...
நீ பேசுஞ்சினுங்கள் சிலவேலை
போதை தருமென அறியேனே...
எண்சான் தேகம் சிலிர்க்கிறதே
என்சான் வரையில் கறைகிறதே...
எதுவுமறியா இவள்போல...
எனக்குள் நுழையும் முனைப்போடு
எப்படித் துயில் கொள்ள முடிகிறது..
பெண்ணென்றாலே விந்தைதானோ...
பேரானந்தத்தில் வியக்கின்றேன்....
~*~

தப்பிசிற்றா.... கைபுள்ள.....

முறைத்த விழிகளால்
வரைமுறையற்று
வன்முறை செய்கிறாய்
வெறித்த விழிபிதுங்கி
வெற்றுச் சிரிப்போடு
தப்பி ஓடநினைக்கிறேன்...


~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...