Thursday, December 27, 2012

தேநீர்.....!




கொஞ்சம் காதலுடன்
தனிமையிலமர்ந்து
ஒரு கோப்பை தேநீர்......

தேநீரின் சுவையும்
காதலின் சுவையும்
கலந்ததாலோ கசக்கிறது
கொஞ்சம் இனிப்புக்கூடி....

வெது வெதுப்பாக
தொண்டை நனைக்கும் முன்...
கொஞ்சம் வெந்துவிட்டிருந்தது.....

தேநீர் திரவம்
சற்றேரக்குறைய
திராவகமாய்...

விரும்பிய பொழுதுகளில்
விட்டுவிட முடியாத வேலையும் ...

விட்டுவிடுவென்று
என்னை வேதனிக்கும்
 காதலும்...

விரும்பியோ விரும்பாமலோ...
என்னை விரும்பச் சொல்லி
வேலை வாங்குகிறது...

விருப்பம் என்னுலேயும் உண்டு
விரும்பாமல் போகதான்
விருப்பமே இல்லை.....

விசாலமான அறையினுள்ளே...
விசிறியுடன் வீற்றிருந்த தருணமும்...

விசிறியே இல்லாமல்....
வீசியடித்த தென்றலும்...

கொஞ்சம் குளுகுளுபையும்...
கொஞ்சம் கதகதபபையும் கூட்டி...
புழுக்கமாய் உணரச்செய்த தருணமும்.....

புன்னகையின் விளிம்பினில்...
புதுவிதமாய் அழச் செய்தது...

பாதி கடந்திருந்த காதலுடன்
மீதமில்லாமல் காணாமல் போனது
தேநீர்....

புரிதுகொன்ண்ட நான் புரியாததுபோல்...
தனிமைக்கு விடைசொல்லி எழமுயல....

வினா எழுப்பியது
தேநீரின் கடைசி சொட்டு....

இன்னும் கொஞ்சம்
காதலில் விழலாமா..?
ஒரு கோப்பை தேநீர் மீது......

~*~




Friday, December 14, 2012

தாயுமானவனாய்...



உன்னை சுமந்து சுமந்தே
சுகம் கண்ட இதயம்
நீ பிரிய நினைக்கையில்
பிரசவ வழியில் துடிக்கிறது....

பிரிந்து விடாதே என் தங்கமே....

நீ
பிறந்து வரும் தருணம்
இதுவல்ல....

பின்னொருநாள்,
பிரணவத்தின்
பொருள் கண்டு.....

பிரபஞ்சத்தில்
உயிர்கொண்டு....

பிரியா  வரம் பெற்று...
பின் பிரவா வரம் பெற
தவமிருப்போம்
அந்த பேரோளியானவனை நோக்கி.....

எந்தத் தாயும்,,
தன்னுள் தவமிருக்கும்
தங்கப்பதுமை
தன்னுள் தாண்டவமாடி..,
தானுடல் கிழியும்படிக்கு....
உதைதெடுக்கும் போதும்.....
அவள் வேறுப்பதேயில்லை,
வலிமறந்து பூத்திருப்பாள்....

அவள்போலதான் நானும்...

நீ
என்னுள் எடுத்த
அவதாரத்தில்....
என் தேகமெல்லாம் தீயிட்டபோதும்....
தீராத்திராவகத்தால் உயிர்சுட்ட போதும்...
விழிகளின் வேரறுத்து விளையாடிய போதும்...

 என்னவளே.......

உன் அற்புதங்களை
நான்
அலச்சியம் செய்வதே இல்லை...

அத்தனையும் ஆனந்தமே........

என்றும் அன்புடன்,
தாயுமானவனாய்...
முத்தரசு.....
~*~

Tuesday, July 17, 2012

நினைதல்............


மழையில் நனைதல்
என் மனதிற்கு பிடித்த
மாயதருணங்கள்

மழை நனைத்தல்
என் விழிகளுக்கு
விருப்பமான
விசித்திர வினாடிகள்

நீயும் மழை போலத்தான்...


நான் நினைக்கும் 
பொதும் வருவதில்லை...


மழை நனைவதும் 
நீ அறிவதில்லை...


எனினும்...


நனைகிறேன்.....
நனைத்துக்கொண்டே...... 



~*~

Monday, July 9, 2012

கொஞ்சம் வெயில் 
கொஞ்சம் குளிர் 
கொஞ்சும் அருவி 

சில நொடி வாழ்கை 
என்னினும் 
சிரித்துக்கொண்டே சாகும் 
நீர் குமிழிகள் 

சிறகு விரித்ததும் 
அந்த ஆன்மா 
சிலிர்க்க வைக்கிறது என்னை.... 

சிந்தனைகள் 
சிதிலமடைந்து செதில் செதிலாய் 
உதிரும் போதும் 
உதிர்ந்துகொண்டே 
இருக்கிறது 
அவளுறங்கும் 
ஆழ்மனம் 

கணப் பொழுதில் ஒரு கானகத் தென்றல் 

அது கடந்து போன தருணம் அவள் கண் விழிதாலோ.....? 

அங்கமெல்லாம் அவளின் ஆராதனை.... 

அணு அணுவாய் அவளோடு ஆலிங்கனம் 

வேறென்ன வேண்டும்..... 

விலகாப் போழுதுகளைத் தவிர............. 
~*~

Wednesday, April 25, 2012

அதே இடதில்.......



கொஞ்சம் புன்னகை..

அதை ஆசை தீர எரிக்கும் வலி....

அதிகமாய் விதைத்துவிட்ட அன்பு

அணு அணுவாய் உயிர் உருவ....

ஆனி வேரும் கொஞ்சம் அசைந்து விட்டது....

அவள் மடி ஏங்கிய மனமும்.....

அவள் விரல் கோததேடிய உயிரும்...

அவல் பொரியாய் நசுக்கப்பட்டு......

செத்துப்போய், சிறிது உயிரொடு.....
அவள் தொடும் தூரதில் தொலைந்து போனது...

திராவக தொடுதல்காரி........

திரும்புவாள் என ஏக்கங்கலோடு காதிருக்கிறேன்...

நான் கானாமல் போன அதே இடதில்.......

~*~

இன்றொருநாள் நிலவோடு...





மொட்டை மாடி தனிமை.....

முழு நிலா இனிமை......

முட்டி மோதும் தென்றல்.....

மோகம் கொண்டு
முத்தமிடும் கொசுக்கள்.....

வட்டமிட்டு வந்து போகும்
குட்டி குட்டி வௌவால்கள்.....

அங்கங்கே பூத்துவரும் நச்சதிரங்கள்......

அதை அலசிப் போகும்
அழகிய மேகங்கள்......

சைட் அடிக்க
பக்கதுவீட்டுப் பொண்ணுங்க......

ஸ்டைல் காட்டும்போது
சூரை போகும் கால்கள்.....

அப்பப்போ எட்டிப் பார்க்கும்
நண்பர்களின் எஸ்.எம்.எஸ்......

எப்பொழுதும் எனக்காகவே
இசைக்கும் எஃப்.எம் பாடல்கள்.....

எப்படியோ ஏங்க வைத்துவிடும்
என்னவளின் நினைவுகள்......

அப்படியே மறக்க வைக்கும்
என்னை அழ வைத்து சிரித்துப்போன
மழலை முகம்.....

சொல்லுவதற்கெல்லாம்
தலையாட்டும் வேப்பமரம்......

எதையோ சொல்லுவதுபோல்
கையசைக்கும் தென்னைமரம்.....

காரணமே இல்லாமல்
குரைக்கும் நாய்க்குட்டி.....

காரணம் தேடி கணக்குப் போடும்
பக்கதுவீட்டுப் பாட்டி.....

அத்தனையும் அசைபோடும்
என் அழ் மனம்.....

அழிந்துவிடாமலிருக்க
கட்டை விரல் ரேகை பதித்து
கவிதை வடிக்கும் கைவிரல்கள்......

ஒரு கைநாட்டுக் கவிஞனாய் நான்......

கவலை மறந்த புன்னகையுடன் நீ....:)

~*~

Thursday, March 8, 2012

சமாதானம்...

என்னத்தைக் கிழித்துவிட்டாய் பிறந்து
மனிதா நீ
என் எண்ணத்தை கிழித்ததைத் தவிர...?

எப்பேர்பட்ட உலகமிது...
எப்பெயர் கொண்டலைகிறாயென
அறிவாயோ...?

எத்தனைவித இறையுண்டு
நீ உண்டு மகிழ...
எதற்காக பசிக்கு
பிள்ளைகளை
எரித்துண்கிறாய்...?

புன்னகை சிந்திய பூவைகளை
புணர்வெறி கொண்டு
புதைத்தாயே...
நீ பூதகுலத்தவனா..?
இல்லை புவியில்
தாயன்றி தப்பிப்பிறந்தவனா?

எத்தணை எத்தணை
வகைப் பிறித்தாய்
எங்களை...
மனிதா
மாதாவின்
கொடிப்பிரிந்ததுமுனக்கு மத வெறிப்பிடித்ததோ...?

அன்னையின் அகக்குருதியூரிவந்த
அமுதத்தில்
ஆலகாலம் கலந்திரிந்ததோ...?
அணுதினமும்
அணுபிரித்திணைத்து அழிப்பதேனடா...?

உன்னாலிலோர் பொழுதும்
செங்கதிர் ரசித்தநினைவுண்டா?
எங்கே...!
செங்குருதி ருசிக்கவே
நேரமிராதேயுனக்கு...!

நெஞ்சுரம் என்னில்
நெருப்பாய் எரிகிறது...
நீடிக்க நேர்ந்தால் நித்தம்
உன் நிழலெரிக்கும்...

என்ன செய்துவிட்டோம்
பிறந்து...
என்ன செய்யப் போகிறோம் இறந்து...
எண்ணிப்பார் உன்னை நீயே..

உனக்குள் ஒளியுண்டு
ஊடுவிச் சென்றுபார்
உடல் எரியத்தான் செய்யும்..
.
உள்ளம் பதறித்தான் சாகும்...

ஆன்மா அலரித்தான்
துடிக்கும்...

அனுபவித்து வா...
உன் தூசு பட்டு
விழிதிரண்ட
திரவமில்லை
இப்பொழுது 
மாசற்று 
இமைசாய்ப்பது...

பறித்தது போதுமினி கொடுத்துப் பழகு....

கொடுப்பதா..?
உன் கேள்வியுணர்கிறேன்...

நீ கர்ணன்போல் கவசமளிந்தால்...
பொருள்தானமது...
அன்னைபோல் 
அமுதிட்டால்...
அன்னதானமது....
நீ கண்மூடி பிறர் திறந்தால்....
கண்தானமது....

இவைகளிலேது செய்யினும்
மனம் இனம்நோக்கிடும்
நிலையுண்டு...

இனம் நோக்காமல்,
மனம் நோகாமல்,
ஏதுமெதிர்பார்க்காமல்,
இதயந்தரும் தானமொன்றுண்டு...
இத்தானங்கொண்டால்...

எத்தானமும் சாத்தியமல்லோ....!

எவ்வுயிரும் வாழுமல்லோ...!

போர்களத்திதை
மனங்கோண்டால்
போர்களுக்கேது அவசியம்....

புரிந்து கொள்வாயெனவே
புன்னகை செய்கிறேன்...

எவ்வழியுண்டென மெய்வழியேந்து....
ஒளவழியறிந்து
அகங்கொண்டொழுகு....
�~*~

Wednesday, February 8, 2012

என்னைப் பகிர்துகொளவும் ஆசை..



இன்னும்

ஒரு துளி உயிர்....
ஒரு துளி நிமிடம்...

ஒரு துளிக் கண்ணீர்...

அதில் கலந்து வழியும் 
ஒருநொடிப் புன்னகை
தேவைப் படுகிறது...
உன்னுடன் பகிர்ந்துகொள்ள....

~*~.

Sunday, February 5, 2012

வண்ணத்துப் பூச்சிகலாவோம் வா.....

விட்டு விட்டு 
துடிக்கிறது இதயம்....

அதன் இடைவெளிகளை 
நிரப்புகிறாய் நீ...

உயிர் கொண்டு வந்தேன்..
உதைத்து உதைத்தே
நொறுக்கிப் போட்டாய்...

நான்
உதிர்ந்து போன
துகள்களை 
உருக்கி எடுத்து
உனக்குப்
புன்னகை செய்தேன்....
என் பரந்த மார்பில்
பட்டாம்பூச்சியின்
படபடப்பு...
அதனை நீ 
அணிந்து கொண்ட
புன்னகையோடு
தொட்டு ரசிக்கையில்..

என்னைப் போலவே
அழகாய்...
இதய வால்வுகளை
இமைபோல் மூடி 

ஒரு நொடி
சிறகுகளை நிறுத்தி...

உன் ஸ்பரிசங்களின் 
பரவலை..
உள்ளிழுத்து 
சிலிர்க்கையில்...
சிறைகளில் அடைத்து விட்டு
செத்துவிட துடிக்கிறது....

ஆனாலும்...
ஆருயிரே...
உன்னருகில் நான் அமர..
என் மார்பில் நீ சாய்ந்து...
மௌனக் கூண்டுடைத்து...
மடை திறக்கையில்...

வார்த்தைகளின் காலடி சிக்கி
அர்த்தங்கள் செத்துப் போக...
ஆகாயம் அதிர சிரித்து 

அப்பொழுதே அழுது....

அமிர்தம் வழியும்
அன்பை...
ஆவலோடு 
அள்ளிப் பருகி..

கூடுடைத்து குதூகலமாய்...
வண்ண சிதறல்களோடு...
வண்ணத்துப் பூச்சிகளாய்
வட்டமிட்டு 

பின்னொரு..
மங்கும்
மாலைப் பொழுதில்

மகரந்தப் படுக்கையில்...

செவ்விதழ்கள் சிறைபிடிக்க..

மலருக்குள் மோட்சம் பெற்று..
மடிந்துவிட ஆசை...

எங்கே...!

ஒரு மந்திரப்
புன்னகைசெய்...
இப்பொழுதே வாழ்ந்து விடலாம்...

~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...