பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Monday, May 31, 2010
மனதில் ஒரு மயானம்....
மெய்.....
கண்ணெதிரேக் காண்பதெல்லாம்
கருவிழிக்குச் சொந்தமில்லை...
உன்னோடு ஊரிப்போயின்
உள்ளந்தொட்டு உயிர்த்தெழும்..
உன்ஜென்மம் புதிதில்லை
உயிர்கூட உனதில்லை...
அள்ளிஅள்ளிப் பருகினாலும்
அறிந்த சுவை
தெளிவாய் உணர்வாய்...
வெளியெல்லாம் விண்மீணாய்
உள்ளிருந்து வெளிச்சம் வரும்...
வளி கொண்ட நீயும் ஒருநாள் வான்தொட்டு
வளர்வாயேனும் நிழல் குரைந்து சிதைவாயேனும்...
வெளி உமிழ்ந்து வீழ்வதுருதி....
பாவம் புண்ணியம் படைத்தவனுக்கில்லை...
பல்வகைக் காமம் துறந்தவனில்லை...
இல்லையென்பவன் கொள்ளாததில்லை...
நிறைகுடமென்கும் காண்பதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
நீர் நிரைந்தால் மண்ணில்
நிலைகொல்வதில்லை...
இன்நொடியில் என்னுடலை
எறும்புண்ணும் எண்பதுவும் எழுதப்பட்ட விதியதுவே...
கண்முன்னே வரும்நாளின்
காட்சியதனை கண்டுகொண்டாள்...
சிலகாலம் தடுக்கலாகும்
தடைப்போடமுடியாதையா.....
Sunday, May 23, 2010
வேண்டுதல் பலித்தது....!!!! (இதுவும் ஒரு காதல் கதை..)
வழிந்துவிட எத்தனிக்கும் நீர்த்துளிகள்...
காத்துக் கொண்டிருந்தன நான்
கண்மூடும் தருனத்திர்க்காக...
கதிரவன் கண்ணுறங்கும் நேரம்...
கார்ப்பனிக்காலம்...
கடுங் குளிரிலும் கண்களைச் சுட்டன
உன் நினைவுகள்...
கால் நோடித்தாமதம்..
இமைகள் தொடும் முன்பு...
சவுக்கு மரங்களை சாய்த்தவாறு...
சருகிசென்று..
கதகதப்பாக கன்னம் தழுவி...
கழுத்துவரை சென்று
கறைபடிந்து காய்ந்து போனது..
கண்ணீர்த் துழிகள்....
மெதுவாக விழி திறந்தேன்...
கண்ணுக்குள் தெரிந்தன,
கடந்து வந்தப் பாதையின்
கலங்கலான காட்சிகள்.............
அனல் பறக்கும் வேலைதான்...
ஆனாலும் குளிர்க்காயந்தோம்.....
ஆலமர நிழலில்...
ஆளரவம் இல்லாத ஆற்றங்கரைப் பகுதி...
அதற்க்கு ஆதாரம் நமது சிரிப்பொலி...
உன் மடிமீது தலைசாய்ந்து...
மணிக்கணக்கில் பேசினேன்....
என் சிக்கலான சுருட்டை முடியினில்...
விரல்கொதி சிக்கேடுத்தாய்...
இதமாக இருக்கவே, இமைமூடி இரசித்தேன்..
உன் இதழ்கள் மௌனமாக...
நான் இருள் விழக்கி உன்
இருவிழிப் பார்த்தேன்..
நம் இமைகள் மட்டும் உரையாட....
உலகம் அமைதியில் இலயித்தது...
என் இருவிழிகளும் உன்
கருவிழிகளில் மயங்கின...
கற்பனைக்கும் எட்டாத
கனவுலகினில் கலந்து...
காதலில் கரைந்து கொண்டிருந்தோம்...
கானமாய் தவழ்ந்து வந்த...
தென்றல் தழுவிய உன் தாவணி...
என் முகமேர்ப் படர்ந்து...
நம் முத்திரைக்குத் தடைபோட்டது...
என்திருநாட்டில்
காற்றிற்கும் தெரிமோ கலாசாரம்...
அதுதான் காமன் கதவினைத் தட்டும் முன்பு..
நம் கனவிற்குத் தாழிட்டதோ...
கனாக் கலைந்தது....
கட்டுப்பாட்டிற்குள் வந்தோம்...
காலம் வேகமாகக் கடந்திருந்தது...
சட்டென எழுந்த வேகத்தில்..
பட்டென முட்டிக்கொண்டேன்
மரக்கிளையினில்...
பதறிப் போன நீ...
பதற்றத்துடனே பக்கம் வந்து..
பக்குவமாய் தேத்து விட்டாய்...
வலி அதிகம்தான்..., ஆனாலும்
இதயம் மட்டும் வேண்டிக்கொண்டது
மறுமுறையும் இடித்துக் கொள்ளும்
நேரம் வரவேண்டும் என...
மாலைக் கதிரவனின் கதிர்கள்
உன் பொன்னிற மேனியில்
பட்டு பிரதிபளிக்க.....
அன்நேரக் கதகதப்போடு..
கால்வாயில் கால்நனைத்து...
கவனமுடன் கடந்து சென்றோம்...
சாலையோர மரங்களில் குயிலோசை...
மாடுமேய்க்கும் ஆயனின் குழலோசை..
கன்னியர்களின் சலங்கையாம்
கலகலவென்ற நீரோசை
சில்வண்டுகளின் இன்னோசை..
முனியாண்டிக் கோயிலின் மணியோசை....
இன்னும் எத்துனை எத்துணையோ
இசை நுணுக்கத்தோடு
இயற்கையின் கச்சேரி...
அத்துனையும் தோற்றுப் போனது...
நான் ரசித்துக் கொண்டிருக்கும்
உனது காலடி ஓசையினால்..
பக்க வாத்தியமாக உனது
கொலுசு மட்டும் சிணுங்கிக் கொண்டிருந்தது...
நீண்ட தூரம் நீளவில்லை நம் பயணம் ...
நத்தைப்போல் நடந்த போதும் ...
பிரியும் இடம் வந்து விட்டது
வெகுவிரைவில்...
கடவுள் கூடக் கண்டிராதக் கவலையை..
ஓரடிக்கு இருமுரைத்திரும்பும்
உன் விழிகளில் கண்டேன்..
கடைத்தெரு வளைவில் நீ
வலையும் தருணம்......
கனீர் கனீர் என்று ஒலித்தது
உனது காலடியில் எனதிதயம் ....
வளைவில் திரும்பும் முன்பு
ஒருகணம் நின்றாய் ...
ஓர் பார்வை பார்த்தாய்...
வர்ணிக்க வார்த்தை இல்லாமல்
குமுறிக்கொண்டிருந்தது எனது மனம்...
உன்னால் கவிங்கனாநேன்....
இருந்தும் என்ன பயன்...?
உன் இருவிழிகளை வர்ணிக்க
வார்த்தை இல்லாமல்
வலிகொண்டு துடிதுடிதேன்
ஒரு ஊமையாக...
அதை என்னவென்று சொல்வது ...?
எப்படிச் சொல்வது...?
எதனோடு ஒப்பிட்டுச் சொல்வது....?
பாலேனசொல்வதா...?
இல்லை இல்லை....
பால்கூட தூய வெண்மை அல்லவே...
நிலவேனச் சொல்வதா...?
இல்லை இல்லை...
நிலவிலும் கலங்கம் உண்டல்லவா...
எப்படிச் சொல்வது...? என்னவென்று சொல்வது...?
ஐயோ... இறைவா....ஒரு கணம் கண்முன் வா...
நீயாவது சொல்லிவிட்டுப் போ...
எரிமலைக்கூட வெடித்திராது இந்த அளவு...
என் இதயத்தில் வெடித்துக் கொண்டிருந்தது...
என்றாலும்.... இதழ் மட்டும் பிதற்றித்
துடித்துக் கொண்டிருந்தது...
மௌனமாக.....
இதயத்தில் எழுந்த அழுத்தம்
பீரிட்டு வந்தன கண்களில்...
இதுவரைக் காணாத உலகம் காண...
எவளவு நேரமென எனக்கேத் தெரியவில்லை..
என் இருவிழிகலையும்
இருள்திரை மறைக்கும் போதுதான்
நான் இமைக்க மறந்ததையே உணர்ந்தேன்....
ஆழிப்பெருங்கடல் போல்
சுழன்ருவந்தக் காற்றில்..
இளமணலும்... இளைச்சருகும்...
என் பாதத்தை பாதிமூடி இருந்தது...
ஒருவழியாக உன் உயிரின்
துணை கொண்டு வீடு சேர்ந்தேன்...
உணவிறங்கவில்லை ...
ஆனால் உன் பிரிவுமட்டும்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பிய்த்துத் தின்றுகொண்டிருந்தது...
ஒரு வழியாக ஒன்றிரண்டு மணிக்கு
உறங்கிப் போனேன்...
உன்னினைவுகளோடு
ஓரிரண்டுனான் கழிந்தது...
அதற்க்கு மேல் என்னால் முடியவில்லை...
உன் தோழி மூலம் தூது விடுத்தேன்...,
"இன்னும் ஓரிரண்டு மணி நேரம்
கழிந்தால், உன் பிரிவு தாளாமல்
உன்னைத்தேடி வந்துவிடும் ஏனதுயிர்
என்னைவிட்டு .." என்று..
ஒருமணிநேரம் சென்றது ....,
அன்று சந்தித்த அதே வேலை...
அதே மாற நிழல்...
நீஉம் வந்தாய்.. தனியாகத்தான்...
நூறு அடிதூரத்தில் உன் முகம் தேறிய...
இருவரும் ஓடி வந்தோம்...
திறந்த வெளியில் எண்கள் இடைவெளி
குறைய ஓடோடிவந்தோம்...
90 அடி
80 அடி
70 அடி
60அடி
50அடி
40அடி
30அடி
20அடி
10அடி
9அடி
8அடி
7அடி
6அடி
5அடி
4அடி
3அடி
2அடி
1அடி
அடுத்தநொடி.....
ஆசையோடு அனைத்துக் கொண்டோம்...
கண்ணீரைப் பகிர்ந்து கொண்டோம்...
இதழ்களை சுவைத்துக் கொண்டோம்ம்......
என்றேன்லாம் சொல்ல ஆசைதான்.....!
ஆனால் நிகழ்ந்தது அதுவல்லவே..
கட்டியணைக்கத்தான் ஓடிவந்தோம்...
ஆனால் கடைசிநொடியில் நீ
காற்றில் அல்லவா கலந்து விட்டாய்......!
திடுக்கிட்டேன்...
கண்டதெல்லாம் கனவா...?
என்னவள் இன்னும் வரவில்லையா...?
ஏதோ தடுமாற்றம்...
எழுந்து ஓடினேன் உன் இருப்பிடம் நோக்கி...
என்ன நடந்திருக்கும்...?
ஏன் நான் இப்படி ஓடுகிறேன்...?
எதுவும் தெரியவில்லை எனக்கு....
ஆனால் நான் எங்கு செல்கிறேன்
என்று மட்டும் எனக்குத் தெரியும்...
ஊருக்குள் நுழைந்தேன்....
கண்ணுக்கெட்டிய துளைவுவரை
யாரும் தென்படவில்லை...
உலகமே அமைதியில் ஓய்ந்து கிடந்தது..
அதிர்ச்சியில் என் உள்ளம்
உறைந்து கொண்டிருந்தது...
ஒவ்வொரு தெருவாக கடந்து வந்தேன்...
உன் தெருவை அடையும் முன்பு.....
என் வழிதூரத்தில்....
ஒரு குழந்தை மட்டும் தவழ்ந்து கொண்டிருந்தது...
எனது கால்களின் வேகம் குறையத்தொடங்கியது...
அமைதி என் காதுகளை அடைத்தது...
எப்போதும் மகிழ்ச்சியாய்
அலைப்பாயும் என் மனம்..
இப்பொழுதோ மயான அமைதியில்....
கடைத்தெரு வளைவை நெருங்க நெருங்க....
இடியைவிட மோசமாகத்துடிதுக்
கொண்டிருந்தது எனது இதயம்.....
அது என்னை தீயில் இட்டு
வதைத்துக் கொண்டிருந்தது....
ஏதேதோ எண்ணங்கள் பயமாய்
தொற்றிக்கொண்டிருந்தத்து..
வாட்டத்துடன் வளைவை நெருங்கினேன்...
என் கால்களின் வேகம்
குறைந்த போதும் கல்பட்டிடற...
இருமடங்காகப் பெருகி என் இதயத்தைப்
பயம் தொற்றிக் கொள்ள...
கடைத்தெரு வளைவை என் கைகளால்
கடந்து வீழ்ந்தேன்....
மெதுவாக கண்திறந்து உன்
வீட்டை நோக்கினேன்...
ஊரே உ வீட்டு வாசலில் வீற்றிருந்தது...
உறைந்து போன என் உதிரம் விரிசல் விட்டது...
ஊராரின் முகமோ விரிசலை விரிவுபடுத்தியது...
உயிரும்...
உடலும்...
உள்ளமும்...
நடுக்கங்கான உன் வாசல் வந்தேன்...
வீட்டின் மையம்.....
உயர்வகைக் கட்டில்....
உலகம் மறந்த உறக்கத்தில் நீ.....
உடல் பொருள் ஆவியெல்லாம்
உதிர்ந்து போகும் நிலையில் நான்...
உருண்டுதிரன்டக் கண்ணீரால்
உணர்ச்சி வசப்பட்டேன்...
உன் முறைமாமன் நானல்லவோ....
உள்ளதைக் கேட்டேன் உரிமையுடன்...
முதிர்ச்சியால் வந்த சுருக்கங்கள்...
அதிர்ச்சியில் அதிகரித்த உடம்பு...
காய்ந்துபோக நிற்கும் கருமுடிகள்....
அங்கங்கு வேன்னிழைகள் ஏறிடும்..
நரைத்துப்போன வயோதிகத்தலை....
எப்போதும் காணத்தக் குரலில் பேசுபவள்....
இப்பொழுதோ கனத்த மனதுடன்...
கரகரத அழுகைக் குரலில்.....
"உன்னைப் பார்க்க தடை சொன்னேனடா...
உயிர் விடுவேன் என்றாலடா...
விளையாட்டாகச் சொன்னேன்
ஆகட்டும் என்று....
பாவி..! வினையாக விஷம் குடித்தாலடா...
பாதகத்தி...! ஒப்புக்கொண்ட பிறகுதான்
உப்புத்தண்ணி குடித்தாலடா..."
அடக்க முடியா ஆவேசம் என்னை ஆட்கொம்டது...
அறிவுகேட்டவளே........
ராட்சசி....
என்னுயிர்க் குடிக்கவந்த காட்டேரி........
என்றெல்லாம் திட்ட நினைத்தேன்...
என்செய்ய.... எழுபதைத்தான்டியவள்....
எதிர்த்துப் பேச இடம் கொடுக்கவில்லை....
என்றாலும் ஏனதுயிர் நீதானே....
ஏக்கத்தோடு பக்கம் வந்தேன்....
எல்லோரையும் வெளியேற்றி
உன்னருகில் அமர்ந்துகொண்டேன்...
ஊன் உணவு எதுவும் இல்லை.....
ஒருதுளி நீரும் இறங்கவில்லை....
கலங்கி நின்றக் கண்ணீர்தான்
கழுத்திரன்கிக் காய்ந்துப் போனது...
எத்துனை நேரமோ எமனோடு போரிட்டாய்....
எமனுக்கும் எமனானேன் நான்........
நீ உன் இரு விழிகளையும் திறந்து
உன் இமை படபடக்க....
இசைக்கட்செறியே நடந்தது என் இதயத்தில்.........
அன்பின் பிறப்போடு வந்த
ஆனந்தக் கண்ணீர் அத்துணைக்
கரைகளையும் அலசிவிட்டது....
உன்னருகே நானிருக்க...
உணர்ச்சிவசப்பட்டு
உடனடியாக எழுந்துவிட்டாய்
என் உயிர்கொண்டு.....
இவுலகம் இடிந்தாலும்...
இனியில்லை ஓர்தடையும்.....
இதழ் கொண்டு இருநிமிடம்
இடைவிடாமல் போர்தொடுத்தோம்...
இருவருக்கும் வெற்றிதான்
என்றாலும் ஏக்கம்தான்...
என் வாய்திறந்து முதல் வார்த்தை..
என்னோடு வந்துவிடு..
என்காவதுப் சென்றிடுவோம்...
எதிர்ப் பேச்சு இல்லாமல்...
என்னோடு எழுந்து விட்டாய்...
நான் மட்டும் எழுந்தவுடன்...
இறக்கமான நிலையினில்...
இடித்துக் கொண்டேன்
இறைவனாலே...!
இம்முறையும் அதேப்பாசம்..,
அதேப் பதற்றம்....
இடிபட்ட மறுநொடியில் இதமாகத்
தேய்த்து விட்டாய்...
இதைத்தானே வேண்டினேன்........
இறைவனுக்கு நன்றி...!
வேண்டுதல் பலித்தது....!!!!
பள்ளிச் சம்பவம்...

பள்ளிப் பருவத்தில்...
பத்திற்கு ஒன்று கழியும்..
பருவ வகுப்பில்..
படித்துக் கொண்டிருந்தேன்...
பசுமையானதொரு காலைப் பொழுதில்...
பத்து நிமிடம் தாமதமாக.....
பளிசென்ற சீருடையில்...
பள்ளிக்கு வந்து சேர்ந்தாய்...
பார்த்ததும் பறிகொடுத்தேன் என்
பச்சை மனதை...
பாசம் கொண்ட முகத்துடன்...
பத்தடி வத்து..
பக்கத்தில் வந்து நின்றாய்...
பார்வைகளின் பகிர்வோடு...
பகிர்ந்துகொண்டாய் இனிப்புகளை...
பார்த்ததுமே புரிந்தும்
புரியாததுபோல் பார்த்தேன்....
பச்சிளங் குழந்தைப்போல்...
பிறந்தநாள் என்றாய்..
பட்டத்தைக் காட்டாமல்...
பாசத்துடன் வாழ்த்தினேன்...
புன்னகையுடன் விளகிசென்றாய்,,,
பள்ளி இடைவேளையில்..
பறந்து சென்றேன்..
பக்கத்துக் கடைக்கு...
பணிவுடன் பார்த்து
பரிசளிக்கப் பொருள்கேட்டேன்...
பத்துவிதப் பேனாக்களைப்
பார்த்துப் பார்த்து...
பச்சைநிறப் பேனாவைப்...
பரிசளிக்கத் தேர்ந்தெடுத்தேன்...
பள்ளியின் முடிவில்...
பண்ணிரண்டுமுரை மணி ஒலிக்க...
பாடப் புத்தகங்களை உன்
பையில் அடுக்கிக் கொண்டிருந்தாய்...
பயத்துடன் பக்கம் வந்து...
பச்சைநிறப் பேனாவைக் கொடுத்து உன்
பாடப்புத்தகத்தில் எழுதுகிறதாப்
பார் என்றேன்...
பரிசென்றரிந்தாயோ நீ...
பரிசு எனக்கா என்றாய்...
பதட்டத்துடன் ஆம் என்று..
படி வழி இறங்கிப் போனேன்...உன்
பார்வையில் வீழ்ந்துப் போனேன்....
Sunday, May 16, 2010
காதலாக....
மறக்க நினைத்தேன்....
இருள் அழித்து இருளாகிறேன்....
ஹலோவ்....!

மார்கழி மாதம்
மணி ஏழு அடித்தும்
வெளிவராத சூரியன்....
மயக்கத்தில் இருந்த நான்.
மௌனம் களைய.,
சிணுங்கினாய் நீ..
கைபேசியில்...
கால் முட்டியில் ஒரு தட்டு...
கறையாகப் படிந்தது இரத்தம்...
இன்று முதல் வேலை
ஒரு கொசுவின் கொலை....
மாண்டதேன்னவோ கொசுதான்.
ஆனால் சிந்தியது எனது இரத்தம்...
பாதியில் கலைக்கப்பட்ட கனவுகள்..
கற்பனை செய்திராதவை
கைபேசியில் உனது அழைப்பு..
கவலை மறந்த நிலையில்..
கவனத்தைக் குவித்தன..
உனைக் காக்கவைப்பதும் சுகம்தான்..
ஆனால்....
காதிருக்கமுடியாமல்
தவித்தது எனது மனம்...
காதருகே உன் குரல்கேட்க....
கைகளில் செயல்பட்டன...
காலையில் நம் குரல்சேர...
காலத்தோடு நாம்சேர ...
காலேமேல்லாம் சேர்ந்திருக்கும்
காதலர்களைப் பிரித்துவைத்து
காதலியே உன் குரல்கேட்க...
உன் காதோரம் நான் சொன்னேன்....
ஹலோவ்....!
கொச்சைத தமிழிலாவது சொல்லிவிடு....

உன் இதழ் மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப்
போனமையால்..
இன்றளவும்
காத்திருக்கிறேன்........
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை,
கொச்சைத் தமிழிலாவது
சொல்லிவிடு..
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் உன்
சந்திப்பை தினம் தேடும் மனம்....
மரமாகிப்போனால்-உன்
மருப்புறையிலேனும்
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்.....
கண்டாயோ கண்ணே......

பல கவிதைகளை
ரசித்ததால் வரவில்லை
ரசிக்கத் தூண்டிய
உன்னைப்பற்றிய வரிகள்...
உன் சுவாசம் நுகர்ந்தேன்...
என் இதயத்தில் இடம்கொள்ள வந்த நீ,
இருந்தவர்களை வெளியேற்றி
இளைப்பாரினாய் இன்பமாக....
நீ நுழைந்த பிறகு,
சிறையை இருந்த மனம்...,
சித்திரங்கள் கொண்ட
சிந்தனைக்கருவூலமாகியது.....
உன் எண்ணங்கள்
எழுர்ச்சி கொண்டவுடன்
எழுந்து வா....
என் செந்நிற உலகம் காண...
வார்த்தை ஜாலங்களின்
வர்ணனையை தெளிந்துகொள்ள..,
தெளிவில்லாத வார்த்தைகள்,...
என் இதய சுவர்களின் பக்கங்களில்
கல்வெட்டுக்களாகப்
பொறிக்கப் பட்டிருக்கின்றன...
அவற்றைப் படித்துப் பார்...
அவைகள் பொறிக்கப்பட்டு ஏற்ப்பட்ட
பள்ளங்களில் கூட..
உன் பிறதிபளிப்புப் பிம்பங்கள்..
பிரகாசிப்பதை உணரலாம்.....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஅ...
கண்ணே நீ கல்வெட்டுக்களைக்
கண்டாயோ...
உன் கண்ணீரின் வீரியம்
என்னைக் கலங்கடிக்கிரததீ ..............
பெண்ணைப் பிறக்க வரம் கொடு.......

பெண்ணே, என்னைப் பெற்றவளே...
உன்னை ஒருகணம் மறக்க முயன்றாலும்-என்
உதிரத்தின் பாய்ச்சலில் உறைதல் நிகழ்கிறதே..
உன்போன்றவர்களை உதறித்தள்ளும் உள்ளத்தவர்..
உயிர் வாழ்வதெப்படி நான் அறியேன்......
கல்நெஞ்சம் கொண்டவன் என பெயர் பெற்றேன் இருந்தும் ...
உன் கரங்களின் அரவணைப்பில், நான்,
கைப்பிடியில் கசியும் கனிரசமாக வழிந்துருகுகிறேன்...
என் முதல் நாளின் முதல் நொடியில் பிறவியெடுக்க நான்..
முட்டி முட்டி உன் உடல் கிழித்து முழுவதும் வெளிவர...
நீ முதற் பிறவி கடந்து மறுபடியும் உயிர்தேழுந்தாய்.....
பசிகொண்டு நான் கதறும் முன்பே....
உன் உதிரத்தை உதிர்த்து எனக்கு அமுதூடினாய்..
ஓலைக் குடிசைக்குள்... உலகம் உரையும் தருணத்திலும்...
உன் உடை அவிழ்த்து எனக்கு தொட்டில் செய்தாய்...
உலகின் ஆழத்தில் ஒரு எறும்பின் குகைக்குள் பிறந்த என்னை...
உயர்த்தி.... உயர்த்தி.... உலகின் உயர்ந்த சிகரத்தில்..
ஒரு கோட்டை கட்டி, அதில் கோடி ஏற்றவும் வைத்து...
உடைந்துருகிப் போனாய்....
தாயே! உனக்கு நன்றி சொல்ல நாவோன்று போதாது....
உணதாசிகளுடன் உறை எழுதுகிறேன்....
உலகே ஒரு நிமிடம் நின்று கேள்.....
உன் ஊரில் கண்ட பெண்களில் சிலர்..........
பேரழகுப் பெண்ணினமே......
உன்னைக் காணும் போதெல்லாம்..
வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்...
உன்னை வர்ணிக்க நானொன்றும்
கம்பன் காளிதாசனில்லை...
இருந்தும்... என் மூலையில்
முடங்கிக் கிடந்த வரிகளில் சில இதோ...
"தங்கத்தின் அச்சுகளில்
தாய்ப் பால் ஊற்றி...
இயற்க்கை அன்னை பெற்றெடுத்த...
பேரழகு சிற்பமாய் சிரிக்கும்",..
உன்னைக் காணும் போதெல்லாம்..
கண்கழங்கி வேண்டிக்கொள்கிறேன்....
உன் வயிற்றிலும் நான்
உன்னை நான் பிறக்க வேண்டும் என...........
என்னைப் பெற்றெடுத்தப் பெண்ணினமே.....
உன்னை அறிந்தே இறைவன்
உனக்கு கருவறை தந்தான்-ஆனால்
அங்கு நீ பெண்ணினதிர்க்கே
கல்லறை பதிக்க முயல்கிறே இது தகுமா...?
அகல் விளக்கே கற்பகிரகத்தை காரிருள் சூழலாமா..?
செதுக்கும் உளியே நீ சிதைத்தல் தகுமா..?
மலர் கொண்ட செடியே நீ மாமிசம் உண்ணலாமா..?
கருவறைப் பூக்கள் கல்லறை சாயலாமா...?
உன்னைப் பெற்றவளும் பெண்தானே.?!
நீ மட்டும் எப்படி பேயாக மாறினாய்....?
உன் தாய் எண்ணி இருந்தால்....
உனது எழும்புகள் எப்பொழுதோ,
நுண்ணுயிரிகளால் எண்ணப்பட்டிருக்கும்...
செய்தாளா..?
இல்லையே...!
ஏன்...?
அவள் பெண்மையின் உண்மை உணர்ந்தவள்
உன்னைப் போல் அறிவிழந்தவளில்லை...
புரிந்துகொள்... பெண்ணே தெளிந்துகொள்...
பெண்ணே நீ...
தியாகத்தின் ஒளிச்சுடராய் மிளிர்கிறாய்...
தாய்மை பெற்று சிறக்கிறாய்...
பொறுமையின் எல்லை தாண்டியும்,
புன்முறுவல் செய்கிறாய்...
அக்காலங்களில் எல்லாம் நீ .
அடிகள்பட்டும்,
அடிமைப்பட்டும் rநீ..
அன்பை மட்டுமே தந்தாய்....
பசியென்று வந்தவன் வாய்திறக்கும் முன்பே,
புசிஎன்று உணவளித்தாய்..
கஷ்டமென நின்றபோதும்
கை கொடுத்து உதவி நின்றாய்...
நோய் பட்டு நொந்த போதும் நீ
விழி திறந்து உயிர்தந்தாய்..
உன்னை அடிக்க ஓங்கிய கையில்,
உரசல் பட்டு உதிரம் வழிய..நீ
உள்ளம் பதறி கண்நீர்வடித்தாய்...
உற்றவர்களை நினைத்து நினது நீ
உன்னை நினைக்கவே மறந்து போனாய்...
பிள்ளைக்குப் பால் சோறூட்டி - நீ
பச்சை தண்ணீரிள் பசி துறந்தாய்..
பிள்ளை நரளுக்குள் வீழ்ந்த போதும் நீ
முகம் சுழிக்க மறுத்துவிட்டாய்..
உன் அன்பின் இழைகொண்டு எங்கள் உள்ளத்தில்
அழியாத விதி செய்தாய்...
இன்றோ...- நீ
உன் பெண்மையில் ஒரு உத்வேகம் கொண்டு
அடிமை விழங்கோடிது உரிமை பெறக்கோரி
உன்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டாய்..
ஆணாதிக்கம் அடக்கப்பட்டபின்பும்-நீ
அட்சொல்லைக் கொண்டு முல்லை தைத்து..
பெண்ணுரிமை என்ற பெயரில்
பெண்ணாதிக்கம் செலுதிக்கொண்டாய்..
அன்றெல்லாம் உடலோத்து
உள்ளமும் அழகாய் இருந்தது....
இன்றோ சிலர்...
உடலழகை காக்கும் பொருட்டு...
பசிஎனக் கதறும் பிள்ளைக்கு..
பாலூட்ட மறுக்கின்றனர்..
உள்ளமெல்லாம் ஆளுக்கு...
இன்று தாய்ப் பால் உண்ணும் குழந்தைகள்...
நாற்ப்பதில் ஒன்றென்றாலும் மிகையாகாது... நாளில்
ஒன்றென்றாலும்...
"பிள்ளைக்காக சொத்து சேர்க்க பெண்ணே நீ
பாரெல்லாம் அழைக்கிறாய்...
பிள்ளை என்னும் சொத்துப் போனால் நீ
பிண்டம் வைக்கவல்லவா அலைவாய்.."
அடுப்பங்கரையில் ஆப்பம் சுடும் ஆயாவேல்லாம்
உன் பிள்ளைக்கு அன்னையாக முடியுமா..?
அன்பைத்தான் தர முடியுமா..?
அறிவோடு செயல் படு பெண்ணே..
நீ அடிபடும் முன்பே விழித்துக்கொள்..
நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..
இறைவா வா வரம் கொடு..
பெண்ணினம் தழைக்க வழி உண்டு...
நான் பெண்ணாய் பிறக்க வரம் கொடு...
வா விரைந்து வா...
வாழ்க தாய்மை...!
வளர்க பெண்மை..!!
ஓங்குக பெண் அன்பு...!!!
Sunday, May 9, 2010
உயிரின் வேதனை...

வெஞ்சொல்லால் வேலெறிந்து..
சூத்திரப் பார்வைகாளால் கணக்கிட்டு..
சுட்டும் விழிகளின் சூட்சுமத்தால்...
சூரியன் போல் சுட்டெரித்தாய்...
வெந்துபோன இதயத்தின் குழம்பு..
விழிகளில் விசும்புகிறது,
வெள்ளை இரத்தமாய்....
விழுந்தபிறகு உறைந்திருந்தால்,
விட்டில் பூச்சியாவது தாகம் தீரும்....
விழிகளிலே உறைந்துவிட்டதால்-என்
வீழ்ந்துபோன உடலைப்பார்த்து...
விரும்பாத உன் இதயம்...
ஒரு வினாடி வருந்துமென..
ஓய்ந்து போன உடலைப்பார்த்து...
ஓயாமல் ஏசுகிறது..
விட்டுப் பிரிந்த
உயிர்....
கர்வம் கொள்ளாதே பெண்ணே......
மௌன நாடகம்....

இமைகளின் தாளத்தில் மௌன நாடகம்..
இனிதே அரங்கேற்றம் - வெற்றிநடை இடுகிறது
இன்றும் உன் கண்களில்..
இமைக்காமல் ரசிக்கிறேன்...
இரவில் முடியும் என்று..
என் இறப்பும் வந்துவிட்டது..
இன்னும் முடியவில்லை -உன்
இமைகளின் தாளம்...
இயங்காமல் இறங்கும்
உயிரையும் இரவல் கேட்கிறேன் ....இறைவனிடம்...
உன் மௌன நாடகத்தை
இமைக்காமல் பார்த்து ரசிக்க இன்னும்..
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...



