
பெண்ணே, என்னைப் பெற்றவளே...
உன்னை ஒருகணம் மறக்க முயன்றாலும்-என்
உதிரத்தின் பாய்ச்சலில் உறைதல் நிகழ்கிறதே..
உன்போன்றவர்களை உதறித்தள்ளும் உள்ளத்தவர்..
உயிர் வாழ்வதெப்படி நான் அறியேன்......
கல்நெஞ்சம் கொண்டவன் என பெயர் பெற்றேன் இருந்தும் ...
உன் கரங்களின் அரவணைப்பில், நான்,
கைப்பிடியில் கசியும் கனிரசமாக வழிந்துருகுகிறேன்...
என் முதல் நாளின் முதல் நொடியில் பிறவியெடுக்க நான்..
முட்டி முட்டி உன் உடல் கிழித்து முழுவதும் வெளிவர...
நீ முதற் பிறவி கடந்து மறுபடியும் உயிர்தேழுந்தாய்.....
பசிகொண்டு நான் கதறும் முன்பே....
உன் உதிரத்தை உதிர்த்து எனக்கு அமுதூடினாய்..
ஓலைக் குடிசைக்குள்... உலகம் உரையும் தருணத்திலும்...
உன் உடை அவிழ்த்து எனக்கு தொட்டில் செய்தாய்...
உலகின் ஆழத்தில் ஒரு எறும்பின் குகைக்குள் பிறந்த என்னை...
உயர்த்தி.... உயர்த்தி.... உலகின் உயர்ந்த சிகரத்தில்..
ஒரு கோட்டை கட்டி, அதில் கோடி ஏற்றவும் வைத்து...
உடைந்துருகிப் போனாய்....
தாயே! உனக்கு நன்றி சொல்ல நாவோன்று போதாது....
உணதாசிகளுடன் உறை எழுதுகிறேன்....
உலகே ஒரு நிமிடம் நின்று கேள்.....
உன் ஊரில் கண்ட பெண்களில் சிலர்..........
பேரழகுப் பெண்ணினமே......
உன்னைக் காணும் போதெல்லாம்..
வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன்...
உன்னை வர்ணிக்க நானொன்றும்
கம்பன் காளிதாசனில்லை...
இருந்தும்... என் மூலையில்
முடங்கிக் கிடந்த வரிகளில் சில இதோ...
"தங்கத்தின் அச்சுகளில்
தாய்ப் பால் ஊற்றி...
இயற்க்கை அன்னை பெற்றெடுத்த...
பேரழகு சிற்பமாய் சிரிக்கும்",..
உன்னைக் காணும் போதெல்லாம்..
கண்கழங்கி வேண்டிக்கொள்கிறேன்....
உன் வயிற்றிலும் நான்
உன்னை நான் பிறக்க வேண்டும் என...........
என்னைப் பெற்றெடுத்தப் பெண்ணினமே.....
உன்னை அறிந்தே இறைவன்
உனக்கு கருவறை தந்தான்-ஆனால்
அங்கு நீ பெண்ணினதிர்க்கே
கல்லறை பதிக்க முயல்கிறே இது தகுமா...?
அகல் விளக்கே கற்பகிரகத்தை காரிருள் சூழலாமா..?
செதுக்கும் உளியே நீ சிதைத்தல் தகுமா..?
மலர் கொண்ட செடியே நீ மாமிசம் உண்ணலாமா..?
கருவறைப் பூக்கள் கல்லறை சாயலாமா...?
உன்னைப் பெற்றவளும் பெண்தானே.?!
நீ மட்டும் எப்படி பேயாக மாறினாய்....?
உன் தாய் எண்ணி இருந்தால்....
உனது எழும்புகள் எப்பொழுதோ,
நுண்ணுயிரிகளால் எண்ணப்பட்டிருக்கும்...
செய்தாளா..?
இல்லையே...!
ஏன்...?
அவள் பெண்மையின் உண்மை உணர்ந்தவள்
உன்னைப் போல் அறிவிழந்தவளில்லை...
புரிந்துகொள்... பெண்ணே தெளிந்துகொள்...
பெண்ணே நீ...
தியாகத்தின் ஒளிச்சுடராய் மிளிர்கிறாய்...
தாய்மை பெற்று சிறக்கிறாய்...
பொறுமையின் எல்லை தாண்டியும்,
புன்முறுவல் செய்கிறாய்...
அக்காலங்களில் எல்லாம் நீ .
அடிகள்பட்டும்,
அடிமைப்பட்டும் rநீ..
அன்பை மட்டுமே தந்தாய்....
பசியென்று வந்தவன் வாய்திறக்கும் முன்பே,
புசிஎன்று உணவளித்தாய்..
கஷ்டமென நின்றபோதும்
கை கொடுத்து உதவி நின்றாய்...
நோய் பட்டு நொந்த போதும் நீ
விழி திறந்து உயிர்தந்தாய்..
உன்னை அடிக்க ஓங்கிய கையில்,
உரசல் பட்டு உதிரம் வழிய..நீ
உள்ளம் பதறி கண்நீர்வடித்தாய்...
உற்றவர்களை நினைத்து நினது நீ
உன்னை நினைக்கவே மறந்து போனாய்...
பிள்ளைக்குப் பால் சோறூட்டி - நீ
பச்சை தண்ணீரிள் பசி துறந்தாய்..
பிள்ளை நரளுக்குள் வீழ்ந்த போதும் நீ
முகம் சுழிக்க மறுத்துவிட்டாய்..
உன் அன்பின் இழைகொண்டு எங்கள் உள்ளத்தில்
அழியாத விதி செய்தாய்...
இன்றோ...- நீ
உன் பெண்மையில் ஒரு உத்வேகம் கொண்டு
அடிமை விழங்கோடிது உரிமை பெறக்கோரி
உன்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டாய்..
ஆணாதிக்கம் அடக்கப்பட்டபின்பும்-நீ
அட்சொல்லைக் கொண்டு முல்லை தைத்து..
பெண்ணுரிமை என்ற பெயரில்
பெண்ணாதிக்கம் செலுதிக்கொண்டாய்..
அன்றெல்லாம் உடலோத்து
உள்ளமும் அழகாய் இருந்தது....
இன்றோ சிலர்...
உடலழகை காக்கும் பொருட்டு...
பசிஎனக் கதறும் பிள்ளைக்கு..
பாலூட்ட மறுக்கின்றனர்..
உள்ளமெல்லாம் ஆளுக்கு...
இன்று தாய்ப் பால் உண்ணும் குழந்தைகள்...
நாற்ப்பதில் ஒன்றென்றாலும் மிகையாகாது... நாளில்
ஒன்றென்றாலும்...
"பிள்ளைக்காக சொத்து சேர்க்க பெண்ணே நீ
பாரெல்லாம் அழைக்கிறாய்...
பிள்ளை என்னும் சொத்துப் போனால் நீ
பிண்டம் வைக்கவல்லவா அலைவாய்.."
அடுப்பங்கரையில் ஆப்பம் சுடும் ஆயாவேல்லாம்
உன் பிள்ளைக்கு அன்னையாக முடியுமா..?
அன்பைத்தான் தர முடியுமா..?
அறிவோடு செயல் படு பெண்ணே..
நீ அடிபடும் முன்பே விழித்துக்கொள்..
நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..
இறைவா வா வரம் கொடு..
பெண்ணினம் தழைக்க வழி உண்டு...
நான் பெண்ணாய் பிறக்க வரம் கொடு...
வா விரைந்து வா...
வாழ்க தாய்மை...!
வளர்க பெண்மை..!!
ஓங்குக பெண் அன்பு...!!!
No comments:
Post a Comment