Sunday, May 9, 2010

உயிரின் வேதனை...


வெஞ்சொல்லால் வேலெறிந்து..
சூத்திரப் பார்வைகாளால் கணக்கிட்டு..
சுட்டும் விழிகளின் சூட்சுமத்தால்...
சூரியன் போல் சுட்டெரித்தாய்...
வெந்துபோன இதயத்தின் குழம்பு..
விழிகளில் விசும்புகிறது,
வெள்ளை இரத்தமாய்....
விழுந்தபிறகு உறைந்திருந்தால்,
விட்டில் பூச்சியாவது தாகம் தீரும்....
விழிகளிலே உறைந்துவிட்டதால்-என்
வீழ்ந்துபோன உடலைப்பார்த்து...
விரும்பாத உன் இதயம்...
ஒரு வினாடி வருந்துமென..
ஓய்ந்து போன உடலைப்பார்த்து...
ஓயாமல் ஏசுகிறது..
விட்டுப் பிரிந்த
உயிர்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...