
உன் இதழ் மொழிவதே
என் இதயத்தின்
இட்சையாகிப்
போனமையால்..
இன்றளவும்
காத்திருக்கிறேன்........
ஒருமுறை சந்தித்து
ஓரிரண்டு வார்த்தை,
கொச்சைத் தமிழிலாவது
சொல்லிவிடு..
உன் மனம் கனிந்தால்
மறுமுறையும் உன்
சந்திப்பை தினம் தேடும் மனம்....
மரமாகிப்போனால்-உன்
மருப்புறையிலேனும்
உன் குரல் கேட்டு
மனம் பெறட்டும் இன்பத்தை
மரணமாய்.....
No comments:
Post a Comment