
இமைகளின் தாளத்தில் மௌன நாடகம்..
இனிதே அரங்கேற்றம் - வெற்றிநடை இடுகிறது
இன்றும் உன் கண்களில்..
இமைக்காமல் ரசிக்கிறேன்...
இரவில் முடியும் என்று..
என் இறப்பும் வந்துவிட்டது..
இன்னும் முடியவில்லை -உன்
இமைகளின் தாளம்...
இயங்காமல் இறங்கும்
உயிரையும் இரவல் கேட்கிறேன் ....இறைவனிடம்...
உன் மௌன நாடகத்தை
இமைக்காமல் பார்த்து ரசிக்க இன்னும்..
No comments:
Post a Comment