வற்றாத ஊற்றிரண்டில்
வழிந்துவிட எத்தனிக்கும் நீர்த்துளிகள்...
காத்துக் கொண்டிருந்தன நான்
கண்மூடும் தருனத்திர்க்காக...
கதிரவன் கண்ணுறங்கும் நேரம்...
கார்ப்பனிக்காலம்...
கடுங் குளிரிலும் கண்களைச் சுட்டன
உன் நினைவுகள்...
கால் நோடித்தாமதம்..
இமைகள் தொடும் முன்பு...
சவுக்கு மரங்களை சாய்த்தவாறு...
சருகிசென்று..
கதகதப்பாக கன்னம் தழுவி...
கழுத்துவரை சென்று
கறைபடிந்து காய்ந்து போனது..
கண்ணீர்த் துழிகள்....
மெதுவாக விழி திறந்தேன்...
கண்ணுக்குள் தெரிந்தன,
கடந்து வந்தப் பாதையின்
கலங்கலான காட்சிகள்.............
அனல் பறக்கும் வேலைதான்...
ஆனாலும் குளிர்க்காயந்தோம்.....
ஆலமர நிழலில்...
ஆளரவம் இல்லாத ஆற்றங்கரைப் பகுதி...
அதற்க்கு ஆதாரம் நமது சிரிப்பொலி...
உன் மடிமீது தலைசாய்ந்து...
மணிக்கணக்கில் பேசினேன்....
என் சிக்கலான சுருட்டை முடியினில்...
விரல்கொதி சிக்கேடுத்தாய்...
இதமாக இருக்கவே, இமைமூடி இரசித்தேன்..
உன் இதழ்கள் மௌனமாக...
நான் இருள் விழக்கி உன்
இருவிழிப் பார்த்தேன்..
நம் இமைகள் மட்டும் உரையாட....
உலகம் அமைதியில் இலயித்தது...
என் இருவிழிகளும் உன்
கருவிழிகளில் மயங்கின...
கற்பனைக்கும் எட்டாத
கனவுலகினில் கலந்து...
காதலில் கரைந்து கொண்டிருந்தோம்...
கானமாய் தவழ்ந்து வந்த...
தென்றல் தழுவிய உன் தாவணி...
என் முகமேர்ப் படர்ந்து...
நம் முத்திரைக்குத் தடைபோட்டது...
என்திருநாட்டில்
காற்றிற்கும் தெரிமோ கலாசாரம்...
அதுதான் காமன் கதவினைத் தட்டும் முன்பு..
நம் கனவிற்குத் தாழிட்டதோ...
கனாக் கலைந்தது....
கட்டுப்பாட்டிற்குள் வந்தோம்...
காலம் வேகமாகக் கடந்திருந்தது...
சட்டென எழுந்த வேகத்தில்..
பட்டென முட்டிக்கொண்டேன்
மரக்கிளையினில்...
பதறிப் போன நீ...
பதற்றத்துடனே பக்கம் வந்து..
பக்குவமாய் தேத்து விட்டாய்...
வலி அதிகம்தான்..., ஆனாலும்
இதயம் மட்டும் வேண்டிக்கொண்டது
மறுமுறையும் இடித்துக் கொள்ளும்
நேரம் வரவேண்டும் என...
மாலைக் கதிரவனின் கதிர்கள்
உன் பொன்னிற மேனியில்
பட்டு பிரதிபளிக்க.....
அன்நேரக் கதகதப்போடு..
கால்வாயில் கால்நனைத்து...
கவனமுடன் கடந்து சென்றோம்...
சாலையோர மரங்களில் குயிலோசை...
மாடுமேய்க்கும் ஆயனின் குழலோசை..
கன்னியர்களின் சலங்கையாம்
கலகலவென்ற நீரோசை
சில்வண்டுகளின் இன்னோசை..
முனியாண்டிக் கோயிலின் மணியோசை....
இன்னும் எத்துனை எத்துணையோ
இசை நுணுக்கத்தோடு
இயற்கையின் கச்சேரி...
அத்துனையும் தோற்றுப் போனது...
நான் ரசித்துக் கொண்டிருக்கும்
உனது காலடி ஓசையினால்..
பக்க வாத்தியமாக உனது
கொலுசு மட்டும் சிணுங்கிக் கொண்டிருந்தது...
நீண்ட தூரம் நீளவில்லை நம் பயணம் ...
நத்தைப்போல் நடந்த போதும் ...
பிரியும் இடம் வந்து விட்டது
வெகுவிரைவில்...
கடவுள் கூடக் கண்டிராதக் கவலையை..
ஓரடிக்கு இருமுரைத்திரும்பும்
உன் விழிகளில் கண்டேன்..
கடைத்தெரு வளைவில் நீ
வலையும் தருணம்......
கனீர் கனீர் என்று ஒலித்தது
உனது காலடியில் எனதிதயம் ....
வளைவில் திரும்பும் முன்பு
ஒருகணம் நின்றாய் ...
ஓர் பார்வை பார்த்தாய்...
வர்ணிக்க வார்த்தை இல்லாமல்
குமுறிக்கொண்டிருந்தது எனது மனம்...
உன்னால் கவிங்கனாநேன்....
இருந்தும் என்ன பயன்...?
உன் இருவிழிகளை வர்ணிக்க
வார்த்தை இல்லாமல்
வலிகொண்டு துடிதுடிதேன்
ஒரு ஊமையாக...
அதை என்னவென்று சொல்வது ...?
எப்படிச் சொல்வது...?
எதனோடு ஒப்பிட்டுச் சொல்வது....?
பாலேனசொல்வதா...?
இல்லை இல்லை....
பால்கூட தூய வெண்மை அல்லவே...
நிலவேனச் சொல்வதா...?
இல்லை இல்லை...
நிலவிலும் கலங்கம் உண்டல்லவா...
எப்படிச் சொல்வது...? என்னவென்று சொல்வது...?
ஐயோ... இறைவா....ஒரு கணம் கண்முன் வா...
நீயாவது சொல்லிவிட்டுப் போ...
எரிமலைக்கூட வெடித்திராது இந்த அளவு...
என் இதயத்தில் வெடித்துக் கொண்டிருந்தது...
என்றாலும்.... இதழ் மட்டும் பிதற்றித்
துடித்துக் கொண்டிருந்தது...
மௌனமாக.....
இதயத்தில் எழுந்த அழுத்தம்
பீரிட்டு வந்தன கண்களில்...
இதுவரைக் காணாத உலகம் காண...
எவளவு நேரமென எனக்கேத் தெரியவில்லை..
என் இருவிழிகலையும்
இருள்திரை மறைக்கும் போதுதான்
நான் இமைக்க மறந்ததையே உணர்ந்தேன்....
ஆழிப்பெருங்கடல் போல்
சுழன்ருவந்தக் காற்றில்..
இளமணலும்... இளைச்சருகும்...
என் பாதத்தை பாதிமூடி இருந்தது...
ஒருவழியாக உன் உயிரின்
துணை கொண்டு வீடு சேர்ந்தேன்...
உணவிறங்கவில்லை ...
ஆனால் உன் பிரிவுமட்டும்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பிய்த்துத் தின்றுகொண்டிருந்தது...
ஒரு வழியாக ஒன்றிரண்டு மணிக்கு
உறங்கிப் போனேன்...
உன்னினைவுகளோடு
ஓரிரண்டுனான் கழிந்தது...
அதற்க்கு மேல் என்னால் முடியவில்லை...
உன் தோழி மூலம் தூது விடுத்தேன்...,
"இன்னும் ஓரிரண்டு மணி நேரம்
கழிந்தால், உன் பிரிவு தாளாமல்
உன்னைத்தேடி வந்துவிடும் ஏனதுயிர்
என்னைவிட்டு .." என்று..
ஒருமணிநேரம் சென்றது ....,
அன்று சந்தித்த அதே வேலை...
அதே மாற நிழல்...
நீஉம் வந்தாய்.. தனியாகத்தான்...
நூறு அடிதூரத்தில் உன் முகம் தேறிய...
இருவரும் ஓடி வந்தோம்...
திறந்த வெளியில் எண்கள் இடைவெளி
குறைய ஓடோடிவந்தோம்...
90 அடி
80 அடி
70 அடி
60அடி
50அடி
40அடி
30அடி
20அடி
10அடி
9அடி
8அடி
7அடி
6அடி
5அடி
4அடி
3அடி
2அடி
1அடி
அடுத்தநொடி.....
ஆசையோடு அனைத்துக் கொண்டோம்...
கண்ணீரைப் பகிர்ந்து கொண்டோம்...
இதழ்களை சுவைத்துக் கொண்டோம்ம்......
என்றேன்லாம் சொல்ல ஆசைதான்.....!
ஆனால் நிகழ்ந்தது அதுவல்லவே..
கட்டியணைக்கத்தான் ஓடிவந்தோம்...
ஆனால் கடைசிநொடியில் நீ
காற்றில் அல்லவா கலந்து விட்டாய்......!
திடுக்கிட்டேன்...
கண்டதெல்லாம் கனவா...?
என்னவள் இன்னும் வரவில்லையா...?
ஏதோ தடுமாற்றம்...
எழுந்து ஓடினேன் உன் இருப்பிடம் நோக்கி...
என்ன நடந்திருக்கும்...?
ஏன் நான் இப்படி ஓடுகிறேன்...?
எதுவும் தெரியவில்லை எனக்கு....
ஆனால் நான் எங்கு செல்கிறேன்
என்று மட்டும் எனக்குத் தெரியும்...
ஊருக்குள் நுழைந்தேன்....
கண்ணுக்கெட்டிய துளைவுவரை
யாரும் தென்படவில்லை...
உலகமே அமைதியில் ஓய்ந்து கிடந்தது..
அதிர்ச்சியில் என் உள்ளம்
உறைந்து கொண்டிருந்தது...
ஒவ்வொரு தெருவாக கடந்து வந்தேன்...
உன் தெருவை அடையும் முன்பு.....
என் வழிதூரத்தில்....
ஒரு குழந்தை மட்டும் தவழ்ந்து கொண்டிருந்தது...
எனது கால்களின் வேகம் குறையத்தொடங்கியது...
அமைதி என் காதுகளை அடைத்தது...
எப்போதும் மகிழ்ச்சியாய்
அலைப்பாயும் என் மனம்..
இப்பொழுதோ மயான அமைதியில்....
கடைத்தெரு வளைவை நெருங்க நெருங்க....
இடியைவிட மோசமாகத்துடிதுக்
கொண்டிருந்தது எனது இதயம்.....
அது என்னை தீயில் இட்டு
வதைத்துக் கொண்டிருந்தது....
ஏதேதோ எண்ணங்கள் பயமாய்
தொற்றிக்கொண்டிருந்தத்து..
வாட்டத்துடன் வளைவை நெருங்கினேன்...
என் கால்களின் வேகம்
குறைந்த போதும் கல்பட்டிடற...
இருமடங்காகப் பெருகி என் இதயத்தைப்
பயம் தொற்றிக் கொள்ள...
கடைத்தெரு வளைவை என் கைகளால்
கடந்து வீழ்ந்தேன்....
மெதுவாக கண்திறந்து உன்
வீட்டை நோக்கினேன்...
ஊரே உ வீட்டு வாசலில் வீற்றிருந்தது...
உறைந்து போன என் உதிரம் விரிசல் விட்டது...
ஊராரின் முகமோ விரிசலை விரிவுபடுத்தியது...
உயிரும்...
உடலும்...
உள்ளமும்...
நடுக்கங்கான உன் வாசல் வந்தேன்...
வீட்டின் மையம்.....
உயர்வகைக் கட்டில்....
உலகம் மறந்த உறக்கத்தில் நீ.....
உடல் பொருள் ஆவியெல்லாம்
உதிர்ந்து போகும் நிலையில் நான்...
உருண்டுதிரன்டக் கண்ணீரால்
உணர்ச்சி வசப்பட்டேன்...
உன் முறைமாமன் நானல்லவோ....
உள்ளதைக் கேட்டேன் உரிமையுடன்...
முதிர்ச்சியால் வந்த சுருக்கங்கள்...
அதிர்ச்சியில் அதிகரித்த உடம்பு...
காய்ந்துபோக நிற்கும் கருமுடிகள்....
அங்கங்கு வேன்னிழைகள் ஏறிடும்..
நரைத்துப்போன வயோதிகத்தலை....
எப்போதும் காணத்தக் குரலில் பேசுபவள்....
இப்பொழுதோ கனத்த மனதுடன்...
கரகரத அழுகைக் குரலில்.....
"உன்னைப் பார்க்க தடை சொன்னேனடா...
உயிர் விடுவேன் என்றாலடா...
விளையாட்டாகச் சொன்னேன்
ஆகட்டும் என்று....
பாவி..! வினையாக விஷம் குடித்தாலடா...
பாதகத்தி...! ஒப்புக்கொண்ட பிறகுதான்
உப்புத்தண்ணி குடித்தாலடா..."
அடக்க முடியா ஆவேசம் என்னை ஆட்கொம்டது...
அறிவுகேட்டவளே........
ராட்சசி....
என்னுயிர்க் குடிக்கவந்த காட்டேரி........
என்றெல்லாம் திட்ட நினைத்தேன்...
என்செய்ய.... எழுபதைத்தான்டியவள்....
எதிர்த்துப் பேச இடம் கொடுக்கவில்லை....
என்றாலும் ஏனதுயிர் நீதானே....
ஏக்கத்தோடு பக்கம் வந்தேன்....
எல்லோரையும் வெளியேற்றி
உன்னருகில் அமர்ந்துகொண்டேன்...
ஊன் உணவு எதுவும் இல்லை.....
ஒருதுளி நீரும் இறங்கவில்லை....
கலங்கி நின்றக் கண்ணீர்தான்
கழுத்திரன்கிக் காய்ந்துப் போனது...
எத்துனை நேரமோ எமனோடு போரிட்டாய்....
எமனுக்கும் எமனானேன் நான்........
நீ உன் இரு விழிகளையும் திறந்து
உன் இமை படபடக்க....
இசைக்கட்செறியே நடந்தது என் இதயத்தில்.........
அன்பின் பிறப்போடு வந்த
ஆனந்தக் கண்ணீர் அத்துணைக்
கரைகளையும் அலசிவிட்டது....
உன்னருகே நானிருக்க...
உணர்ச்சிவசப்பட்டு
உடனடியாக எழுந்துவிட்டாய்
என் உயிர்கொண்டு.....
இவுலகம் இடிந்தாலும்...
இனியில்லை ஓர்தடையும்.....
இதழ் கொண்டு இருநிமிடம்
இடைவிடாமல் போர்தொடுத்தோம்...
இருவருக்கும் வெற்றிதான்
என்றாலும் ஏக்கம்தான்...
என் வாய்திறந்து முதல் வார்த்தை..
என்னோடு வந்துவிடு..
என்காவதுப் சென்றிடுவோம்...
எதிர்ப் பேச்சு இல்லாமல்...
என்னோடு எழுந்து விட்டாய்...
நான் மட்டும் எழுந்தவுடன்...
இறக்கமான நிலையினில்...
இடித்துக் கொண்டேன்
இறைவனாலே...!
இம்முறையும் அதேப்பாசம்..,
அதேப் பதற்றம்....
இடிபட்ட மறுநொடியில் இதமாகத்
தேய்த்து விட்டாய்...
இதைத்தானே வேண்டினேன்........
இறைவனுக்கு நன்றி...!
வேண்டுதல் பலித்தது....!!!!
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment