
பல கவிதைகளை
ரசித்ததால் வரவில்லை
ரசிக்கத் தூண்டிய
உன்னைப்பற்றிய வரிகள்...
உன் சுவாசம் நுகர்ந்தேன்...
என் இதயத்தில் இடம்கொள்ள வந்த நீ,
இருந்தவர்களை வெளியேற்றி
இளைப்பாரினாய் இன்பமாக....
நீ நுழைந்த பிறகு,
சிறையை இருந்த மனம்...,
சித்திரங்கள் கொண்ட
சிந்தனைக்கருவூலமாகியது.....
உன் எண்ணங்கள்
எழுர்ச்சி கொண்டவுடன்
எழுந்து வா....
என் செந்நிற உலகம் காண...
வார்த்தை ஜாலங்களின்
வர்ணனையை தெளிந்துகொள்ள..,
தெளிவில்லாத வார்த்தைகள்,...
என் இதய சுவர்களின் பக்கங்களில்
கல்வெட்டுக்களாகப்
பொறிக்கப் பட்டிருக்கின்றன...
அவற்றைப் படித்துப் பார்...
அவைகள் பொறிக்கப்பட்டு ஏற்ப்பட்ட
பள்ளங்களில் கூட..
உன் பிறதிபளிப்புப் பிம்பங்கள்..
பிரகாசிப்பதை உணரலாம்.....
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஅ...
கண்ணே நீ கல்வெட்டுக்களைக்
கண்டாயோ...
உன் கண்ணீரின் வீரியம்
என்னைக் கலங்கடிக்கிரததீ ..............
No comments:
Post a Comment