Thursday, July 7, 2011

மகாப்பிரளயம்...




அலை அலையாய் நீ அலைவதனால்
நான் முத்தெடுக்க
மூழ்கிப்போனேன்...
கடலென்ன கடலென்று
உன் கடவாய் கொண்ட முத்துக்களை...
நான் மூச்சுகொண்டு
வருடுகின்றேன்...
என் இளமையெல்லாம்
இளைத்தெடுத்து...
அதை உன் அழகோடு
கோர்த்தெடுத்து..
என்னவளே....
உன் சமைந்த தேகத்தில்
சரளமாய் தமிழ்பேசும்
உன் சங்குக் கழுத்தூதி...
காற்றுமட்டும் வெளியெடுத்து...
அதில் நாணத்தைப்
பிரித்தெடுத்து...
பிரளயப் பொழுதுகளாய்
நாம் புரண்டெழுந்த கதையெழுத...
கனவு மட்டும் போதுமோடி,
என்னுயிரே நீ என்
கருந்தோலில்
களவுபோன பொழுதெழுத...
இரவுருக்கி எடுத்தாலும்
மை உன்
இமைக்கே போதாதடியே....

அணு அணுவாய் நேசிக்கிறேன்...



நீ அழகாகத்தான்
இருக்கிறாய்...

உன் கண்கள்
கவர்ச்சியாகத்தான்
இருக்கிறது...

உன் இதழ்கள்
இனிமையாகவே இருக்கிறது...

உன் மொழிகள்
மௌனம் சிந்தும் பொழுதும்
எனை
மயக்கவே செய்கிறது...

உன் உடல் கண்டால்
என் உணர்ச்சிகளை
உள்ளிருந்து உருவியெடுத்து
உண்மை சொல்லவே
துடிக்கிறது...

ஆனால் ஏனோ...

இவைகளை விட....

உன் இரத்த சகதியில்
இரகசியம் பேசும்
உன் இதயம் மட்டுமே
எனை ஈர்க்கிறது....

உன் இளமையில் பூத்துக்
குளுங்கும்
அழகைமட்டும் நான்
நேசிக்கவில்லை....

இனிவரும் நாட்களில்,
இன்னும் இருநூறு
வருடம் கழித்து
இயலாமல் உன் இதழ்
சிந்தும் எச்சிலையும்
நேசிக்கிறேன்...

என்றும் உன் நினைவுகளுடன்,
முத்தரசு..
~*~

சக்கை...

இதயத்தில் அழுத்தம்
அதிகரிக்கிறது....
வெடித்துவிடாமலிருக்க
வெளியேற்றுகிறேன்
என் உணர்ச்சிகளின் சக்கைகளை...
கவிப்பூக்கலாய்...
~*~

பலிக்குப் பலி...பலிக்குப் பலி...

ஊர் திருவிழா
உடல்சிலிர்க்க ஆடியவர்கள்
கடலென திரண்ட மக்களை
கவர்ந்திழுக்க...
காவுக்காய் கட்டப் பட்ட
கடாவுக்கு காவல் காக்கும்
கட்டயப்பன் மட்டும்
கண்களில் நீர்தழும்ப
வேண்டிக் கொண்டான்...
ஐயனே என் ஆட அறுக்கும்போது
வலிக்காம பாத்துக்க....
உனக்கு அடுத்த வருசம்
ஆறு கோழிய காவுதாரேன்....

எந்தமிழச்சியே...



தமிழினிக்கிறது
நா உன்னை சொல்லி
நடனமிடும் போது...

ஒவ்வொரு நொடியிலும் தவமிருந்தேன்...


சீக்கிரமாக பிறந்துவிட்டேன்...
சிலப்பல பொழுதுகளில்
சிந்தைக்குள்
நத்தைப் புகுந்து
பின் சிந்தனைகள்
சீறிப்பாய
சிற்ரெறும்பிலும்,
சிங்காரப் பொழுதுகலிலும,
உள்ள உயிரோட்டத்தை
உணரத்தொடங்கினேன்...
ஒவ்வொரு நொடியிலும்
தவமிருந்தேன்..
உன் அன்பு கிடைக்கப் பெற்ற
பொழுதுகளில்தான்
நான் முழுமைபெற்ற
குழந்தையாகிப்போனேன்....

வானவில் இரசிக்கிறாயோ வசியக்காரி...

நீ வானவில் ரசிக்கும் போது
நான் வானம் பார்கிறேன்....
அடடா...!
உன் விழிபட்ட வெட்கத்தில்
வானம்
வண்ணங்களாய்
வழிகிறதே
உன் விழிகளில்....
விழிக்கு மையிட்டாயோ
வசியக்காரி....
உன் விழிகளே போதுமே
விண்மீண்களையும்
சமைத்தெடுக்க.....

இளிப்பு..

உன் வளித்தெடுத்த தலையில்
வகிடெடுக்க வரிசையில்
வந்துபோகிறது உன்னைக்கண்டு
பல்ளிலித்தே உதடுகிழிந்த
சீப்பு....
~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...