Thursday, July 7, 2011

பலிக்குப் பலி...பலிக்குப் பலி...

ஊர் திருவிழா
உடல்சிலிர்க்க ஆடியவர்கள்
கடலென திரண்ட மக்களை
கவர்ந்திழுக்க...
காவுக்காய் கட்டப் பட்ட
கடாவுக்கு காவல் காக்கும்
கட்டயப்பன் மட்டும்
கண்களில் நீர்தழும்ப
வேண்டிக் கொண்டான்...
ஐயனே என் ஆட அறுக்கும்போது
வலிக்காம பாத்துக்க....
உனக்கு அடுத்த வருசம்
ஆறு கோழிய காவுதாரேன்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...