Thursday, July 7, 2011

மகாப்பிரளயம்...




அலை அலையாய் நீ அலைவதனால்
நான் முத்தெடுக்க
மூழ்கிப்போனேன்...
கடலென்ன கடலென்று
உன் கடவாய் கொண்ட முத்துக்களை...
நான் மூச்சுகொண்டு
வருடுகின்றேன்...
என் இளமையெல்லாம்
இளைத்தெடுத்து...
அதை உன் அழகோடு
கோர்த்தெடுத்து..
என்னவளே....
உன் சமைந்த தேகத்தில்
சரளமாய் தமிழ்பேசும்
உன் சங்குக் கழுத்தூதி...
காற்றுமட்டும் வெளியெடுத்து...
அதில் நாணத்தைப்
பிரித்தெடுத்து...
பிரளயப் பொழுதுகளாய்
நாம் புரண்டெழுந்த கதையெழுத...
கனவு மட்டும் போதுமோடி,
என்னுயிரே நீ என்
கருந்தோலில்
களவுபோன பொழுதெழுத...
இரவுருக்கி எடுத்தாலும்
மை உன்
இமைக்கே போதாதடியே....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...