பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, July 7, 2011
மகாப்பிரளயம்...
அலை அலையாய் நீ அலைவதனால்
நான் முத்தெடுக்க
மூழ்கிப்போனேன்...
கடலென்ன கடலென்று
உன் கடவாய் கொண்ட முத்துக்களை...
நான் மூச்சுகொண்டு
வருடுகின்றேன்...
என் இளமையெல்லாம்
இளைத்தெடுத்து...
அதை உன் அழகோடு
கோர்த்தெடுத்து..
என்னவளே....
உன் சமைந்த தேகத்தில்
சரளமாய் தமிழ்பேசும்
உன் சங்குக் கழுத்தூதி...
காற்றுமட்டும் வெளியெடுத்து...
அதில் நாணத்தைப்
பிரித்தெடுத்து...
பிரளயப் பொழுதுகளாய்
நாம் புரண்டெழுந்த கதையெழுத...
கனவு மட்டும் போதுமோடி,
என்னுயிரே நீ என்
கருந்தோலில்
களவுபோன பொழுதெழுத...
இரவுருக்கி எடுத்தாலும்
மை உன்
இமைக்கே போதாதடியே....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...

No comments:
Post a Comment