Wednesday, May 25, 2011

உன் நகைக்கல்லவா?



அழகான பெண் நீ
அல்லவா?

அமைதி உன் விழி பேசும்
மொழி அல்லவா?

நீ சிரித்தால் சில்லெனும்
மழை அல்லவா?

மழை நின்றாலும்
மண்வாசம் நீ அல்லவா?

உன் கோபங்கள் எனக்கு
வரமல்லவா?

வரம் தரும் மகிழ்ச்சியே
நீ அல்லவா?

உன் தொலை தூர பயணத்தில்
துணை நானல்லவா?

நான் தொலைந்துபோன
சமுத்திரம் நீ அல்லவா?

உன் விரல்களில் இடைவெளி எனதல்லவா?

அதை நான் நிரப்பும்போது
சினுங்கல்கள் உனதல்லவா?

உன் இளமையில்
இடைமடிப்பு
நானல்லவா?

உன் முதுமையில்
விழும் பற்கள் "முத்த"ல்லவா?

முகஸ்துதி உனக்கு
பகை அல்லவா?

உனைமறந்தால்
என் ஆவி புகையல்லவா?

என் சிந்தனைகள்
உனைப்பாடும் வகையல்லவா?

இவை எல்லாமே உன்
இதழ் சிந்தும்
நகைக்கல்லவா?

Wednesday, May 11, 2011

வாசகன் நான் வாசகம் நீ.....

சுருக்கமாக சொல்லப்பட்ட
வாசகம் நீ...
ஆனால் நான்
படிக்க
ஆரம்பித்த
போது மட்டும்
நீ வரலாற்று
கதைகளாய்
நீள்கிறாய்...

என் ஏக்கம் நிறைவேறுமா...?

எதையோ தேடித்தான்
வந்தேன்...
இடமெதுவென பயந்தழுதேன்...
எங்கேயும் நடப்பவர்கள்
என்னைக் கண்டு
மகிழ்ந்தனர்....
எப்போதும் எதையோ
ஏங்கித் திளைத்தவர்களும்
என் கண்கண்டு
மயங்கி மறந்தனர்....
சிரிப்பிழந்து செல்லரித்த
முகமுடையோர்
என்னால் புல்லரித்து
புன்னகை பூத்தனர்...
சுட்ட வெயில் பட்ட காலில் வெட்டப்பட்ட
வெடிப்புகள்....
எனை சுமந்து சுகமுண்டன....
தூர்வாரி துடைத்தெடுத்த
மூலையுடையோரும்
முழுதாய் நிறைந்து
முத்தமிட்டனர்....
யவனுமறியா எந்திரமாய்
எனக்குள் இருப்பவனை
மந்திரத்தில் தேடுபவனும்
மதிதெளிந்து மயங்கித்தான் போயினர்
என் மந்திரப் புன்னகையில்....
எத்தனையோ பெண்களின்
காந்த பார்வையில்
எளிதாய் தப்பியவர்களும்
எந்தன் விழிபட்டு
எழவிரும்பாமல் பைத்தியமாய்
மொழிந்தனர்...
மீண்டுமொரு குழந்தைப்பருவம்
கிடைக்குமா....?
ஏங்கித் தவிக்கிறேன்....
எப்பொழுதோ கிடைத்த
அன்புக்காக நான்....

என் தோழ்வியோ வெற்றியோ எங்கே...?

நீ திரும்பிப் பார்பாய்
என்றுதான் நான்
திரும்பிப் பாராமல்
அலைந்தேன்...
ஓர்நாள் நீ
திரும்பினாய்
அன்று
நீ பார்பதர்க்கு
நான் அங்கு இல்லை...
என்னைத் திரும்ப
வைக்க
என்னைப் போல்
தீவிரமாய் யாரோ
அலைந்து கொண்டிருந்தாள்..
எனக்குமுன்
ஜெயித்தாள்
அவள்....
தோல்வி
உனக்குத்தான்...

அவள் புரிந்துகொள்வாலா..

உன்னைத் தேடி வந்தேன்
விழிதனில் விளக்கேற்றி...
நீ எனை வார்த்தைகளால்
அணைக்க முயன்றாய்...
நான் அணைந்தது போல்
அணைந்திருக்கிறேன்...
நீ அறியாமல் சிறுப் பொறியாய்...
ஒருநாள் நீ உணர்வாய்
இருள் உன் உள்ளம் சூழ்வதை...
அன்று நீ என்னைப்
பற்றி சிந்திப்பாயானால்...
நான் சிரித்துக் கொண்டே வருவேன்...
உன் சிந்தை குளிர...!
அப்போது நீ எனை அணைப்பாய் நான்
அணைவதற்கல்ல...
என்னுள் கலப்பதற்கு...
அன்றுவரை நானும்
புகைந்துகொண்டேனும்
இருப்பேன்...
யாருக்குத் தெறியும்
எனை எவளேனும்
கண்டுகொண்டால்...
நீ இருளில் கரைவதை
தடுத்தல் இயலாது...

நீ வதைவதை விரும்பாமல் நான்...

நீ வேண்டும் என
நான் நினைக்கும்
வரைதான் உன்னால்
எனை வதைக்க முடியும்
நான் மறுத்தால்
தெறியும் மரணத்தின்
வருடல்....

அழுக்காகியே அழகாகிறேன்...

சிலநேர சினுங்கள்கள்
என்னை ஓட
வைக்கிறது....
எவளெவளுக்கோ
கொலுசாகிப்போன
உன் புன்னகை
எனக்கு பரிசாகாதோ...
தேடித் தேடி அலைகிறேன்.
எங்கு கொலுசொலி
கேட்டாலும்...
ஓடி ஓடிப் போகிறேன்.
ஒருமுறையேனும்
தேடிப் பிடித்திட...
நீ என்னிதயம் துளைத்து
உறைநெய்த பொழுதுகளில்
உன் சிரிப்பொலி
எனக்கு
கொலுசினின்
சினுங்களென
தவரித் தைத்ததன்
விளைவு....
புரியவில்லை
எனக்கு
உன் புன்னகையில்
பிறந்துவந்த
கொலுசொலி
இறந்துபோகுமென
நினைத்தே
நானும்
மெல்ல மெல்ல
இறந்து
கொண்டிருந்தேன்
நீயோ
திடீர் திடீரென்று
பிறந்து
என்னை தினரடித்தாய்...
அதனாலேயே நான்
அழகாகிறேன்
அலைந்து அலைந்து
அழுக்காகியே....

வலியுணர்ந்தேன்...

மயிலிறகின்
வருடல்
என்
ரணத்தில்
படர்ந்து
வலித்தது....
உனது சுவாசம்
என்
மனதில்
படர
நான்
உணர்ந்ததைப்
போல...

மை....

எனக்கு தெறியாத
உண்மையை
நான் மறந்து
போகவில்லை....
நான் மறந்துபோன
உண்மை
எனக்கு
எனக்குச்
சொல்லப்பட்டதல்ல...
எனக்குத் தெறிந்த
செய்தி பொய்யானதல்ல...
எனக்குச் சொல்லப்பட்ட
செய்தி உண்மையானதல்ல...
செவிமடுக்கிறேன்...
விழிமொழிகிறேன்...
அறிவலசுகிறேன்...
உண்மை பொய்மைக்குள்ளும்...
பொய்மை உண்மைக்குள்ளும்...
பொய்மையும் உண்மையும்
எம்மைக்குள் கலந்து...
எனக்கு
மை வைத்துவிட்டது...
இங்கு உண்மை
என் மூலை மலுங்கிவிட்டது...
பொய் என் மூலை மலுங்கிவிட்டதென
நான் சொன்னது...

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...