அழகான பெண் நீ
அல்லவா?
அமைதி உன் விழி பேசும்
மொழி அல்லவா?
நீ சிரித்தால் சில்லெனும்
மழை அல்லவா?
மழை நின்றாலும்
மண்வாசம் நீ அல்லவா?
உன் கோபங்கள் எனக்கு
வரமல்லவா?
வரம் தரும் மகிழ்ச்சியே
நீ அல்லவா?
உன் தொலை தூர பயணத்தில்
துணை நானல்லவா?
நான் தொலைந்துபோன
சமுத்திரம் நீ அல்லவா?
உன் விரல்களில் இடைவெளி எனதல்லவா?
அதை நான் நிரப்பும்போது
சினுங்கல்கள் உனதல்லவா?
உன் இளமையில்
இடைமடிப்பு
நானல்லவா?
உன் முதுமையில்
விழும் பற்கள் "முத்த"ல்லவா?
முகஸ்துதி உனக்கு
பகை அல்லவா?
உனைமறந்தால்
என் ஆவி புகையல்லவா?
என் சிந்தனைகள்
உனைப்பாடும் வகையல்லவா?
இவை எல்லாமே உன்
இதழ் சிந்தும்
நகைக்கல்லவா?
