Wednesday, May 11, 2011

அழுக்காகியே அழகாகிறேன்...

சிலநேர சினுங்கள்கள்
என்னை ஓட
வைக்கிறது....
எவளெவளுக்கோ
கொலுசாகிப்போன
உன் புன்னகை
எனக்கு பரிசாகாதோ...
தேடித் தேடி அலைகிறேன்.
எங்கு கொலுசொலி
கேட்டாலும்...
ஓடி ஓடிப் போகிறேன்.
ஒருமுறையேனும்
தேடிப் பிடித்திட...
நீ என்னிதயம் துளைத்து
உறைநெய்த பொழுதுகளில்
உன் சிரிப்பொலி
எனக்கு
கொலுசினின்
சினுங்களென
தவரித் தைத்ததன்
விளைவு....
புரியவில்லை
எனக்கு
உன் புன்னகையில்
பிறந்துவந்த
கொலுசொலி
இறந்துபோகுமென
நினைத்தே
நானும்
மெல்ல மெல்ல
இறந்து
கொண்டிருந்தேன்
நீயோ
திடீர் திடீரென்று
பிறந்து
என்னை தினரடித்தாய்...
அதனாலேயே நான்
அழகாகிறேன்
அலைந்து அலைந்து
அழுக்காகியே....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...