எதையோ தேடித்தான்
வந்தேன்...
இடமெதுவென பயந்தழுதேன்...
எங்கேயும் நடப்பவர்கள்
என்னைக் கண்டு
மகிழ்ந்தனர்....
எப்போதும் எதையோ
ஏங்கித் திளைத்தவர்களும்
என் கண்கண்டு
மயங்கி மறந்தனர்....
சிரிப்பிழந்து செல்லரித்த
முகமுடையோர்
என்னால் புல்லரித்து
புன்னகை பூத்தனர்...
சுட்ட வெயில் பட்ட காலில் வெட்டப்பட்ட
வெடிப்புகள்....
எனை சுமந்து சுகமுண்டன....
தூர்வாரி துடைத்தெடுத்த
மூலையுடையோரும்
முழுதாய் நிறைந்து
முத்தமிட்டனர்....
யவனுமறியா எந்திரமாய்
எனக்குள் இருப்பவனை
மந்திரத்தில் தேடுபவனும்
மதிதெளிந்து மயங்கித்தான் போயினர்
என் மந்திரப் புன்னகையில்....
எத்தனையோ பெண்களின்
காந்த பார்வையில்
எளிதாய் தப்பியவர்களும்
எந்தன் விழிபட்டு
எழவிரும்பாமல் பைத்தியமாய்
மொழிந்தனர்...
மீண்டுமொரு குழந்தைப்பருவம்
கிடைக்குமா....?
ஏங்கித் தவிக்கிறேன்....
எப்பொழுதோ கிடைத்த
அன்புக்காக நான்....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment