Wednesday, May 11, 2011

அவள் புரிந்துகொள்வாலா..

உன்னைத் தேடி வந்தேன்
விழிதனில் விளக்கேற்றி...
நீ எனை வார்த்தைகளால்
அணைக்க முயன்றாய்...
நான் அணைந்தது போல்
அணைந்திருக்கிறேன்...
நீ அறியாமல் சிறுப் பொறியாய்...
ஒருநாள் நீ உணர்வாய்
இருள் உன் உள்ளம் சூழ்வதை...
அன்று நீ என்னைப்
பற்றி சிந்திப்பாயானால்...
நான் சிரித்துக் கொண்டே வருவேன்...
உன் சிந்தை குளிர...!
அப்போது நீ எனை அணைப்பாய் நான்
அணைவதற்கல்ல...
என்னுள் கலப்பதற்கு...
அன்றுவரை நானும்
புகைந்துகொண்டேனும்
இருப்பேன்...
யாருக்குத் தெறியும்
எனை எவளேனும்
கண்டுகொண்டால்...
நீ இருளில் கரைவதை
தடுத்தல் இயலாது...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...