வலியுணரும் போது
யாரும் உணர்வதில்லை...
வலியின் உணர்வுகளை...
நான் முயன்றேன்...
என்னால் முடிந்தவரை..
வலியோ.....
மௌனமாய்...
மௌனத்தின் அழுத்தமாய்...
அழுத்தத்தின் ஆங்காரமாய்...
அதிலும் ஒரு அழகாய்..
அலை கொணர்ந்த நுரையென...
சில நிமிட சிற்பமாய்
வெடித்தெரித்து மறைந்தது..
உணர்ந்தது சில நொடிப்பொழுதேனும்...
ஒருவருக்கும் கிட்டாத வரமன்றோ...
அந்த சில நொடி வரத்தில்தான் எத்தனை எத்தனை சாபச் செய்திகள்...
வலி ஒரு ஞானி என்பதை
மனிதனின் விஞ்ஞானம் கூட உணர்ந்திருக்க வில்லை...
ஞானசூனியம் என சிலர் எனை ஏசக்கண்டேன்...
எனக்கெப்படி எட்டியது...?
ஞானியின் பேச்சை என் செவிகள் எங்கிருந்து கவர்ந்தன...?
எதுவும் புரியாமல் குழம்பும் எனக்குள் ஒரு தெளிவில்லாத விடை வினாவாகத்தான் எழுகிறது...
அதற்கும் விடை
வலியின் வரிகள்தான்...
ஒரு ஞானியால் மட்டுமே விடைகொண்ட வினாவிற்கு விடை சொல்லி விளக்க முடியும்...
உணர்வுகலோடு உறவாடும் போதுதான்..
அதனோடு உறையாடவும் முடியுமன்றோ...!
அழையாவிருந்தாளியின்
அனுபவப் பேச்சு எனது பேனா கருப்பு எழுத்துக்களால வரைந்த கடிதமானது...
மனிதா எனைத் தெறிகிறதா...?
எத்தனைப் பெயரெனக்கு...
ஞான் வெளிப்படும் ஒவ்வோரிடமும் ஓர்வாராகப் பெயரெனக்கு...
சிறு காயம் பட்டாலும் நானே...
சிரம் அறுந்தாலும் நானே...
ஏனோத் தெரிவதில்லை எனக்கு...
உணர்சிகளால் ஆன என்னை,
உணர்வுகளுக்குள் உட்படுத்தி
என்னை நிர்வாணமாக்கி அழுகின்றனர்....
அந்தக் கண்களில் வழியும்
கண்ணீரில் கரைவதென்மரபானது...
அதுதான் நியதி.....?!
அந்த நியதி உணர்சிகளுக்கு மட்டுந்தானா...?
உணர்வுகளில் வெளிப்படும் நான்
கண்ணீரில் கரைந்து விடுவதில்லை...
எனை வெளிக்கெணர பல போராட்டங்கள்...
எனை கொலை செய்யத்துணிவதாக எண்ணி பிறரிடம்
எனை பிரசவித்து விடுகின்றனர்...
மனிதனுக்குப் பிள்ளைகள் பல பெற்றெடுக்க ஆன காலத்தைவிட எனை கொல்ல நினைக்கும் காலம் அதிகமானதை அறிவாயோ நீ...
உலகில் அதிகமாக பிறப்பதும் நான்தான்
மிகக் குறைவாக இறப்பதும் நான்தான்...
மனிதன் பெற்றெடுத்த மக்களைவிட மக்கள் பெற்றெடுத்த எம்மக்கள்த் தொகைதான் உலகில் உயர்வு...
உங்கள் துன்பம் விழக ஒரு வழியுண்டு...
என் மரணம்..
ஆம்
எனக்கும் மரணமுண்டு... என்னை கொல்லும் வழியைவிடுத்து...
எனை வெல்ல வழித்தேடு...
என் இறுதிநாள்,இருளோடு நான் கரையும் நாள்... அதுதான்...
விடையும் சொன்னேன்
வழியும் சொன்னேன்
எனை விட்டுவிளகுவதும் உன்விருப்பம்,
விடாமல் தொடர்வதும் உன்விருப்பம்...
இப்படிற்கு,
உங்களிடமிருந்து
என்றும் "விடைபெறத்துடிக்கும்"
வலி..
ஸ்ஸ்ஸ்ஹாஆஆ...வலித்தது எனக்கு...
அய்யோ என்னுள்ளும்
வலியின் பிரசவம்...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Monday, November 8, 2010
Subscribe to:
Posts (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...