Friday, December 14, 2012

தாயுமானவனாய்...



உன்னை சுமந்து சுமந்தே
சுகம் கண்ட இதயம்
நீ பிரிய நினைக்கையில்
பிரசவ வழியில் துடிக்கிறது....

பிரிந்து விடாதே என் தங்கமே....

நீ
பிறந்து வரும் தருணம்
இதுவல்ல....

பின்னொருநாள்,
பிரணவத்தின்
பொருள் கண்டு.....

பிரபஞ்சத்தில்
உயிர்கொண்டு....

பிரியா  வரம் பெற்று...
பின் பிரவா வரம் பெற
தவமிருப்போம்
அந்த பேரோளியானவனை நோக்கி.....

எந்தத் தாயும்,,
தன்னுள் தவமிருக்கும்
தங்கப்பதுமை
தன்னுள் தாண்டவமாடி..,
தானுடல் கிழியும்படிக்கு....
உதைதெடுக்கும் போதும்.....
அவள் வேறுப்பதேயில்லை,
வலிமறந்து பூத்திருப்பாள்....

அவள்போலதான் நானும்...

நீ
என்னுள் எடுத்த
அவதாரத்தில்....
என் தேகமெல்லாம் தீயிட்டபோதும்....
தீராத்திராவகத்தால் உயிர்சுட்ட போதும்...
விழிகளின் வேரறுத்து விளையாடிய போதும்...

 என்னவளே.......

உன் அற்புதங்களை
நான்
அலச்சியம் செய்வதே இல்லை...

அத்தனையும் ஆனந்தமே........

என்றும் அன்புடன்,
தாயுமானவனாய்...
முத்தரசு.....
~*~

1 comment:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...