Thursday, December 27, 2012

தேநீர்.....!




கொஞ்சம் காதலுடன்
தனிமையிலமர்ந்து
ஒரு கோப்பை தேநீர்......

தேநீரின் சுவையும்
காதலின் சுவையும்
கலந்ததாலோ கசக்கிறது
கொஞ்சம் இனிப்புக்கூடி....

வெது வெதுப்பாக
தொண்டை நனைக்கும் முன்...
கொஞ்சம் வெந்துவிட்டிருந்தது.....

தேநீர் திரவம்
சற்றேரக்குறைய
திராவகமாய்...

விரும்பிய பொழுதுகளில்
விட்டுவிட முடியாத வேலையும் ...

விட்டுவிடுவென்று
என்னை வேதனிக்கும்
 காதலும்...

விரும்பியோ விரும்பாமலோ...
என்னை விரும்பச் சொல்லி
வேலை வாங்குகிறது...

விருப்பம் என்னுலேயும் உண்டு
விரும்பாமல் போகதான்
விருப்பமே இல்லை.....

விசாலமான அறையினுள்ளே...
விசிறியுடன் வீற்றிருந்த தருணமும்...

விசிறியே இல்லாமல்....
வீசியடித்த தென்றலும்...

கொஞ்சம் குளுகுளுபையும்...
கொஞ்சம் கதகதபபையும் கூட்டி...
புழுக்கமாய் உணரச்செய்த தருணமும்.....

புன்னகையின் விளிம்பினில்...
புதுவிதமாய் அழச் செய்தது...

பாதி கடந்திருந்த காதலுடன்
மீதமில்லாமல் காணாமல் போனது
தேநீர்....

புரிதுகொன்ண்ட நான் புரியாததுபோல்...
தனிமைக்கு விடைசொல்லி எழமுயல....

வினா எழுப்பியது
தேநீரின் கடைசி சொட்டு....

இன்னும் கொஞ்சம்
காதலில் விழலாமா..?
ஒரு கோப்பை தேநீர் மீது......

~*~




No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...