Monday, July 9, 2012

கொஞ்சம் வெயில் 
கொஞ்சம் குளிர் 
கொஞ்சும் அருவி 

சில நொடி வாழ்கை 
என்னினும் 
சிரித்துக்கொண்டே சாகும் 
நீர் குமிழிகள் 

சிறகு விரித்ததும் 
அந்த ஆன்மா 
சிலிர்க்க வைக்கிறது என்னை.... 

சிந்தனைகள் 
சிதிலமடைந்து செதில் செதிலாய் 
உதிரும் போதும் 
உதிர்ந்துகொண்டே 
இருக்கிறது 
அவளுறங்கும் 
ஆழ்மனம் 

கணப் பொழுதில் ஒரு கானகத் தென்றல் 

அது கடந்து போன தருணம் அவள் கண் விழிதாலோ.....? 

அங்கமெல்லாம் அவளின் ஆராதனை.... 

அணு அணுவாய் அவளோடு ஆலிங்கனம் 

வேறென்ன வேண்டும்..... 

விலகாப் போழுதுகளைத் தவிர............. 
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...