Tuesday, February 21, 2017

விந்தைப் பெண்....

செவ்வாய் மினுக்கும் வெளி நோக்கி....
செவ்விதழ் பிரியா மொழி பேசி...
இடப்புற உடுக்கை தாலாட்ட...
இயல்பே யாதென இமை மறக்க...
எங்கும் மெய்யுடன் உன்வாசம்
ஏகன் எனதுயிர் ஈர்கிறதே...
பரந்தப்பெறுவெளி கொள்ளாதோ
உன் நேசப் பேரொளி விரிகிறதே...
பேசா மடந்தை சிலவேலை
பேதை நீயெனவறிவேனே...
நீ பேசுஞ்சினுங்கள் சிலவேலை
போதை தருமென அறியேனே...
எண்சான் தேகம் சிலிர்க்கிறதே
என்சான் வரையில் கறைகிறதே...
எதுவுமறியா இவள்போல...
எனக்குள் நுழையும் முனைப்போடு
எப்படித் துயில் கொள்ள முடிகிறது..
பெண்ணென்றாலே விந்தைதானோ...
பேரானந்தத்தில் வியக்கின்றேன்....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...