Tuesday, February 21, 2017

என் செல்லச் சொப்பனமே...

உள்ளே உழுதிட்டு
விதைத்தவளே...
ஊறும் வேரின்
ஆழம் அறிந்திடவோ
நீ விழுதாய் வளர்திட்டாய்...
வா...
வளரு...
தொடு...
துளை...
தூணாகு...
தூரத்தோண்டு...
திருகிச் செல்...
திறம்பட நில்...
திணறல் கொடு...
மென்னிதையம் தேடு...
மெல்லிசை உணர்...
மெய் மற...
மெல்லச் சுற்று ...
மிருதங்கம் இசைக்கும்...
மிருதுவாய் துளை...
மின்னலோடு நுழை...
மிரளாதே...
மீளாச் சொற்கம் புகும்
என் செல்லச் சொப்பனமே...
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...