Friday, March 16, 2018

முகநூல் தேவதை

நான் கண்டிராத பூ நீ...
அலைவரிசை சரியாய்
இருந்தால் அவ்வப்போது
மலர்கிறாய்...
அப்பொழுதுகளிலெல்லாம்
நானும் உன்னோடே
மணக்கிறேன்...
எத்தனை நாட்கள்
இப்படி குறுந்தகவல்
குண்டுகளால் குட்டிக் குட்டி
அன்புப் போரிடுவது ?!
சீக்கிரம் ஓர்நாள்
உன் முகங்காட்டு ...
உன்முகங்காணும் வரை
நான் முகநூலில் மட்டுமே
போர் தொடுத்து
காத்திருக்கிறேன்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...