Wednesday, February 9, 2011

யுகம் யுகமாய் யுத்தம்செய்...

அலைச்சலில் தொலைந்த
சில நொடிப்பொழுதுகள்
உயிர்பெற்றழத் துடித்த
அந்த பொழுது...

பேருந்தின் பேரிரைச்சல்
செவிகளுக்குள்
சேராமல்போன சில நொடிகள்...

வேரறுந்தும் விழாத
தலை மயிர்கள்
உயிர்பெற்று பறந்த
ஆச்சர்யம்...

சாறுபிளியும்
நெறிசலிலும்
உணர்விற்கு
உணவாகிய
சில நொடி நிகழ்வு...

உழைத்துக் களைத்துப்போன
மக்களின்
வியர்வைநாற்றமும்
மண்வாசமாய் மாறிய
அந்தத் தருணம்...


தொப்பைவாதிகளால்
ஏறிமிதிக்கப்பட்டும்
காற்றில் மிதந்த அந்த
நிலைகொண்ட
அனுபவம்...

எட்டாத கம்பியில்
இல்லாத இடைவெளியை
எக்கிப்பிடிக்க துணிந்த
பொழுதுகளிலும்
புல்வெளியின்
பனித்தூரலை
அனுபவித்த நிஜமான
ஒரு நிகழ்வு..


எங்கும் கூட்ட நெறிசல்
அதிலும் உனக்காக
ஒதுக்கப்பட்டதாய்
ஓரிடைவெளி...

அதிலமர்ந்த நீ அழகாய் சிந்திய சில அமைதிப் பார்வை....

அடைமழையாய் அடிவயிறு வரை மின்னல் பாய்ச்சி அணுக்களை பிளந்து பின் இணைத்து ஓர் அற்புத போர் புரிய...

அடடா இவள் விழிசெய்த வாட்போரிலும் வீழ்ந்து போய் மீண்டும் எழுகிறேன்...

இமைகளால் மற்போரிட்டு மறுபடியும் சாய்க்கிறாள்...

பின் புன்னகை தூவி
எனை மீண்டும்
அழைக்கிறாள்
புதுவித போர் புரிய...

புரியாமல் தவிக்கிறேன் தோழ்விகள் எனைத் துளையிட்டுச் செல்லாத தருணங்களை...

ஓர்நாள்
புத்தகங்கள்
நிரம்பி வழியும்
இந்தப் போர்களை
பற்றிய குறிப்புகளை
சேகரித்தே...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...