Tuesday, February 8, 2011

ஆனாலும் ஆனாலும் ஆருயிரே...

சொட்டு சொட்டாய்
வழியும் என் நினைவுகள்
என் மார்பில்
விழுந்து தெறித்து
சிதறிவிடுகிறது
ஆனால் அதில் கலந்து வரும்
உன்மீதான பாசம் மட்டும்
படர்ந்து விடுகிறது ...
அதில் தினந்தோறும்
வழுக்கி விழுவது
நீயாக இருந்தாலும்
தாங்கிப் பிடிப்பது
நானாகவே இருக்கிறேன்...
நீ விழுவதாக இருந்தாலும்...
தழுவுவதாக இருந்தாலும்...
நானாகவே இருக்க
துடிக்கிறேன் ...
நீயோ சிலநேரம் மலர்களில் விழுகிறாய்,
சில நேரம் மழலைகளை
தழுவுகிறாய் ...
மலரைவிட மென்மையாதல்ல
என்நெஞ்சம் ...
மழலையைப் போல்
சுத்தமானதல்ல என் மனம்...
ஆனாலும் ஆனாலும்
ஆருயிரே ...
நீ அணைக்காமல்
ஆராது என்னுயிரே....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...