சொட்டு சொட்டாய்
வழியும் என் நினைவுகள்
என் மார்பில்
விழுந்து தெறித்து
சிதறிவிடுகிறது
ஆனால் அதில் கலந்து வரும்
உன்மீதான பாசம் மட்டும்
படர்ந்து விடுகிறது ...
அதில் தினந்தோறும்
வழுக்கி விழுவது
நீயாக இருந்தாலும்
தாங்கிப் பிடிப்பது
நானாகவே இருக்கிறேன்...
நீ விழுவதாக இருந்தாலும்...
தழுவுவதாக இருந்தாலும்...
நானாகவே இருக்க
துடிக்கிறேன் ...
நீயோ சிலநேரம் மலர்களில் விழுகிறாய்,
சில நேரம் மழலைகளை
தழுவுகிறாய் ...
மலரைவிட மென்மையாதல்ல
என்நெஞ்சம் ...
மழலையைப் போல்
சுத்தமானதல்ல என் மனம்...
ஆனாலும் ஆனாலும்
ஆருயிரே ...
நீ அணைக்காமல்
ஆராது என்னுயிரே....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment