Tuesday, February 8, 2011

பொய் சொல்லத் தெறியவில்லை உனக்கு...

உனது கண்டிப்பான பார்வையில்
நான் சுதந்திரமாய்
திரிந்து செல்ல
என்று அனுமதி கிடைக்குமென்று
ஏங்கி ஏங்கி அலைகிறேன்
ஆனால் உனது விழிகளோ
இமையின் இறகுகள் திறந்தும்
எனை ஏரிட மறுக்கிறது ...
எனை ஏன் மறுக்கிறாய்
என்ற என் இதழ்களின் வினா உன்
செவிகளுக்குள் சென்றன
காற்றைவிட சுதந்திரமாய் ...
பதில் சொல்வதாய் நினைத்து நீ
எனைப் பார்த்து சொன்னாய் ...
உனைப் பார்க்க விருப்பம்
இல்லை என ...
பின் ஏன் பார்த்தாய் என்றேன்..?
உனது செவ்விதழ்குழிய கடித்து,
இமைகளை இருக்க
மூடிக்கொண்டாய்...
ஆனால் எனக்குத் தெரியும்...
அங்கும் நீ எனைப் பார்த்துக்
கொண்டுதான்
இருக்கிறாய் என்று ...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...