Tuesday, February 8, 2011

அப்பாடா... இந்த உலகத்திற்கு ஆயுசு கெட்டி...

அமைதியாய் ஒரு நீரோட்டம்...
அதில் சல சலக்கும் போராட்டம்...
எனக்குள் இருந்தால்...
"இப்படி"யேனும்
அருவிகொட்டும்...
பெண்ணே உனக்குள் எழுந்ததால்
உறைந்தள்ளவோ உயர்கிறது ...
இமயம் ஒன்றும் உயரம் அல்ல...
உன் இமையின் கருவுக்குள்
உறைந்துயர்ந்த
துயரங்களின் முன்பு ...
நீ உடைபடும் வரை
உறுதியாய் நம்புவேன்,
உலகம் நீரால் அழியாது...
ஒவ்வொரு நொடியும்
உனக்காக வாழ்வேன்..
உன் விழி நீரால் வழியாது...
நீ புன்னகை பூப்பதால்..
உனைப் பூ என்றனர்...
பூவிற்குவமை நீயென
என் மனம் கொள்ள வில்லை..
நீயே பூவிற்குவமையென
என் நா மொழிந்தால்
பூக்கள் எனைக் கொல்வதுமிலை...
ஏய்...இப்போது நீ
சிரித்தாயா...?
அப்பாடா...
இந்த
உலகத்திற்கு ஆயுசு கெட்டி...
அடடே சிரிப்பப் பாரு.....:-)

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...