என் சில நேரப் பசி...
சில நாட்கள் நீண்ட கோபம்...
யார் மீது..!?
யார் மீதோ....!
அடிவியிறில் சுரக்கும் அமிலம்...
கந்தகத்தின் வீரியம் கூட்டி குடல்திண்ண...
என்றைக்கோ நான் அழுத சப்தம்...
இன்றைய நினைவில்...
அழக்கூடாதெனப் பிடிவாதமாய்
அரங்கேறிய கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
விரல்களின் இடைவெளி எடுத்த திண்பண்டம்...
என் நாவுக்கு அஞ்சி ஒழிய முனைந்ததே...
அதற்கு ஒழிந்துகொள்ள
கட்டிடங்கள் எழுந்தைக் கண்டு
கண்சிவத்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
பெய்த மழையெல்லாம்
பெறத் துடித்த போது வரவில்லையே...
இளைப்பாரிய இடத்தினிருந்தும்...
என்னை எழச் செய்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ....!
வேண்டாத போதும் விரும்பி வந்த என் சொந்தம்...
விரும்பும் போது
விழகிப் போனதால்...
வீரிட்டு வந்த கோபம்..
யார் மீது...!?
யார் மீதோ...!
சில்லறையாய் சிரித்த என்னிடம்
சில்லறைக்காக சிரித்தவர்களின் ரூபம்
சீண்டிப்பார்த்து சிரிப்பதனால்...
சீற்றத்துடன் வந்த கோபம்...
யார் மீது...!?
யார் மீதோ...!
நான் அனுபவிக்க நினைத்த தனிமையின் சுகம்...
அவதிப்படும் போது அறிந்துகொள்ளத் துண்டியதே...
அதன் தாமதம் கண்டு
தாவி வந்த கோபம்...
கோபம்...?
ஏன் கோபம்....?
நான் அனுபவிக்க நினைத்தேன்..
அனுபவம் கிடைத்தது....
அனுபவம் அறிந்து சொன்னது...
கோபப்படாதே...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment