Sunday, April 3, 2011

எதற்காக வென்றே தெறியவில்லை...

நான் கிழித்துத்
தைக்கப் பட்டவன்....

எனது தழும்புகளில்
நரம்புகள் இன்னும்
அறுக்கப் படவில்லை....

தெரித்திருந்த
இரத்தம் கூட
வளைந்து நெளிந்து
வடு வடுவாய்
என்னை அறுத்து
இதயம் எடுத்தவளின்
முகவரிதனை
வரைந்து காட்டியது...

அதைத் தொடர்ந்தே
அலைந்து பார்த்தேன்...
அகோரக் காயத்துடனே...

அங்கே அவள்
சின்னஞ் சிறு
மழலையருடன்
ஏதும் அறியாதவளாய்..
ஒரு மழலைப் போலவே....

அறுகே சென்றேன்
அன்னார்ந்தாள்...
அறுப்பட்ட காயம்
அவள் கண்ணில் பட
ஆக்ரோச நாகமாய்
மாறி
தைக்கப் பட்ட இடத்தில்
வைக்கப் பட்ட நாம்பினை
சரேலென் இழுத்தாள்...

கண்டது குற்றமா..
வினா கூட தொடுக்கவில்லையே
இந்த வேள்விதனை
வீசியதெதற்க்கென்றென்...

நரம்பாய் இருந்தது
நங்கையவளின் தலை முடியாம்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...