நான் கிழித்துத்
தைக்கப் பட்டவன்....
எனது தழும்புகளில்
நரம்புகள் இன்னும்
அறுக்கப் படவில்லை....
தெரித்திருந்த
இரத்தம் கூட
வளைந்து நெளிந்து
வடு வடுவாய்
என்னை அறுத்து
இதயம் எடுத்தவளின்
முகவரிதனை
வரைந்து காட்டியது...
அதைத் தொடர்ந்தே
அலைந்து பார்த்தேன்...
அகோரக் காயத்துடனே...
அங்கே அவள்
சின்னஞ் சிறு
மழலையருடன்
ஏதும் அறியாதவளாய்..
ஒரு மழலைப் போலவே....
அறுகே சென்றேன்
அன்னார்ந்தாள்...
அறுப்பட்ட காயம்
அவள் கண்ணில் பட
ஆக்ரோச நாகமாய்
மாறி
தைக்கப் பட்ட இடத்தில்
வைக்கப் பட்ட நாம்பினை
சரேலென் இழுத்தாள்...
கண்டது குற்றமா..
வினா கூட தொடுக்கவில்லையே
இந்த வேள்விதனை
வீசியதெதற்க்கென்றென்...
நரம்பாய் இருந்தது
நங்கையவளின் தலை முடியாம்....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment