Saturday, October 15, 2011

சும்மா....உ..லூ...லு...லா.

நிலையான நிலவு
உன்னை
நிம்மதியில்லாத போது
காணவில்லை....

நித்தம் நித்தம்...
கனவில் காண...
நித்திரையும் வரவில்லை....

நினைவில்மட்டும்
உன்னைத்தேட
நிழல் கூட
துணையில்லை....

கண்கழ் வழியே
கண்ணீர் வழிய
துடைப்பதற்கு
கைகள் இல்லை....

வருத்தங்களை
வதைப்பதற்கு
ஆறுதல் சொல்ல
யாருமில்லை....

துன்பந்தனை சொல்லிடவே
தோழியொருத்தி
எனக்கில்லை....

அறுசுவை உணவிருந்தும்
காட்டுத்தீயாய்
பசியிருந்தும்
புசிப்பதற்கு மனமில்லை....

ஏன் எனைப் படைத்தாயோ...?
என இறைவனைக் கேட்டேன்....

அவன் சொன்னான்.....
சும்மா....உ..லூ...லு...லா.
....~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...