இயற்கையின்
இளைய மகள்....
இவ்வளவு நேரம்
மழைத்துளியில்
தலைமுழுகி....
சாரலாய் தலைதுவட்டி...
நட்சத்திர பொடுகு நீங்க....
மேக கூந்தல் ஒதுக்கி...
தமிழ் மகளாய் மஞ்சள் பூசி...
தன் விரிந்த கேசத்தில்
முகம் மறைத்து....
மெது மெதுவாய் விழி காட்டி...
நாணந்தெளிக்கிறாள்...
என் இதயம் நனைப்பதே
இவளுக்கு
முழுநேர வேலையாம்....
பாவம்.....
இங்கு ஏற்கனவே இவளின்
தமக்கையொருத்தி
கறைத்துவிட்ட சேதி
அறியால் போலும்.....

No comments:
Post a Comment