பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Saturday, October 15, 2011
ஈழம்..
எம்மினமழிய எவ்வழியுமிலை தோழா...
எந்திரத்தை தூக்கி,
மந்திரமோதி..
எந்நெஞ்சை கிழித்தாலும்
எந்தமிழன்னயை யானெப்படி
மறபேன்....
எவ்வெண்ணங் கொண்டு
என்மனந்திரியினும்...
அவ்வெண்ணமதிலும்
அன்னையல்லவோ அரசால்கிறாள்...
விழியறுக்க வேதனையென்ன....
என் வலியெல்லாம்
வதைபட்ட ஈழமதில்
வந்திரங்கியதல்லோ...
குரிதியுண்ண கூடிவந்தோர்
விடியல்வர வீனாவார்...
வருமோர் காலம்...
தினமொரு எதிர்காலம்..
விடிவதுறுதி...
நீ அழுவதென்ன....
தமிழா...எந்தமையனே...
நீ விழுந்துதான் கிடக்கிறாய்...
வீழ்ந்துவிடவில்லை...
விழித்துவா வேந்தனே...
விடியலுறுதி.....
~*~
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...

No comments:
Post a Comment