Saturday, October 15, 2011

ஈழம்..


எம்மினமழிய எவ்வழியுமிலை தோழா...
எந்திரத்தை தூக்கி,
மந்திரமோதி..
எந்நெஞ்சை கிழித்தாலும்
எந்தமிழன்னயை யானெப்படி
மறபேன்....
எவ்வெண்ணங் கொண்டு
என்மனந்திரியினும்...
அவ்வெண்ணமதிலும்
அன்னையல்லவோ அரசால்கிறாள்...
விழியறுக்க வேதனையென்ன....
என் வலியெல்லாம்
வதைபட்ட ஈழமதில்
வந்திரங்கியதல்லோ...
குரிதியுண்ண கூடிவந்தோர்
விடியல்வர வீனாவார்...
வருமோர் காலம்...
தினமொரு எதிர்காலம்..
விடிவதுறுதி...
நீ அழுவதென்ன....
தமிழா...எந்தமையனே...
நீ விழுந்துதான் கிடக்கிறாய்...
வீழ்ந்துவிடவில்லை...
விழித்துவா வேந்தனே...
விடியலுறுதி.....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...