Wednesday, March 16, 2011

அவள் யாரோ...?

எனக்குத் தெறியாத நீ
உனக்குத் தெறிந்த நான்
என்னை நேசிக்கும் நீ
உன்னை சந்திக்காத நான்
ஒவ்வொருமுறையும்
உணர்ச்சிவசப்பட்டு
உள்ளத்தை உலரிவிடத்துடிக்கும்
நீ
ஏனோ பயம் கொண்டு
ஒதுங்குகிறாய் ...
எந்தப் பெண்ணிடமாவது
உள்ளத்தை தொலைக்க
மாட்டோமா என்று ஏங்கும் நான்
எங்கெங்கோ தேடுகிறேன் உன்னை ...
உனக்குத் தயக்கம்...
எனக்குத் தாகம்...
உனது தயக்கம்
எனது தாகத்தை அதிகறிக்கிறது...
என்றும் எவளுக்காகவோ
காத்திருக்கிறேன் ...
அவள் நீதானென அறியாமலேயே...
நீ
சொல்லாமல் போனால்
நான் இல்லாமல் போய்விடுவேன்
ஓர்நாள் ...
நீ அழகில்லையென
ஒதுங்கலாம் ...
நான் அழகானவலையே
விரும்புகிறேன்
என்பதை நீ அறிந்ததாலோ...
ஆனால் நீ என்னை
விரும்புவதை என்
உள்ளம் அறியும்போது
எனக்கு உன்னைப்போல்
அழகாய்
ஒன்றும்மே தெறியாதென்பதை
நீ அறியாயோ
என் அசட்டுப்பெண்ணே....
சீக்கிரம் மனம்
திறந்து சொல்லிவிடு
உன் உதடுகளின்
விரிசலில் இளைப்பார
இன்றளவும் ஏக்கங்கலோடே
காத்திருக்கிறேன் ....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...