Tuesday, March 15, 2011

வலிமையாய் துடிக்குது இதயம்

உன் விழிகளில் வழிகின்ற முதல்
கவிதை ...
என் விடியலில் நனைகின்ற
புது காதல் ...
நீ சிரிக்கையில் வருகின்ற
குளிர் காய்சல் ...
அந்த தருணத்தில் பொழிகின்ற
மழைச் சாரல் ...
உன் குழலினில் இசைக்கின்ற
நொடிப் பேச்சு ...
என் செவிகளில் ஒலிக்கின்ற
குயில் கீச்சு ...
யவர் நடுகிடப் பேசிய என்
இயல்பு ...
இன்று மூங்கில்கள் சீண்டிய
தென்றலாச்சு ...
உன் பார்வையில் விழுகின்ற
பாதைமுழுதும் ...
என்னை பைத்தியம்
ஆக்கியே தேந்துபோச்சு...
தினம் பகலவனோடு உனைச் சுற்ற...
இரவிலோ நினைவுகள் எனைச்
சுற்ற ...
எத்துணை முறைதான் என் இதயம் ...
இருகியே சாகும் என் இதயம்...
வலியறியாதோ உன் தேகம்
இங்கு வலிமையாய்
துடிக்குது உன் இதயம்...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...