Thursday, March 17, 2011

பரிசல் பரிசு...

நான்
உனக்காய்
ஏதுசெய்யவும்
துணிவேன்
எனவும்
நீ
மற்றவர்களைப்
போலவே கேட்டாய்...
எனக்காய் உயிர்
துறப்பாயா என்று...
துறப்பதற்கு அது
ஒன்றும்
காதல் பரிசாய்
நீ தந்த
கண்ணாடிப்
பெட்டியல்ல ....
என்தாய்
கணம் கணமாய்
கவனித்து
கண்ணிமைக்கும்
தருணத்திலும்
மறமாவாது
பலநாள் தவமிருந்து
பக்குவப்படுத்தி
இன்பதுன்பங்கள்
கலந்து
நதியாய் ஓடும்
இந்த
உலக வாழ்கையை
நான்
கவலையின்றி
கடந்துசெல்ல
அளித்த
பரிசல் அது ...
நீயும் வா
நிம்மதியாய்
நீந்திச்செல்லலாம்...
நினைத்தும் பார்காதே
என் பரிசலில் நீ மட்டும்
நீந்துவதாய் ...
....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...