Thursday, March 17, 2011

மங்கை...





எத்துணைப் பிறப்பு
என்றாலும் உன்
போலில்லை ....
மழலையின் சிரிப்பு
நீ மலர்ந்ததும்
பிறந்ததென்ன ....
கவலைகள் நீ
கொண்டபோது
அதை காணததுபோல்
காட்டியதென்ன ....
தாகம் வந்து
தாக்கியபோதும்
நீ புன்னகையால்
தணித்த தென்ன ....
விரல்களின்
இடைவெளிதனை
நீ இல்லாமல்
செய்ததென்ன ...
கோபம் வந்து
கொப்பளிக்க
நீ குட்டித்தீவில்
குமுறும்
எரிமலையாய்
வெடித்ததென்ன ...
உன் கால்கள்
நான் தடம்பதிக்க
தேய்ந்ததென்ன ....
அழகாய் நீ ஆணவம்
கொண்டும் அடிமனதில்
அமைதியென்ன ...
ஆவணங்கள் இல்லாத போதும் நீ
அழகாய்
மிளிருவதென்ன ....
அன்பாய் விளித்தாலும்
விழியால் அழைத்தாலும்
என் உள்ளம்
ஓர் இறகாய்
பறப்பதென்ன ...
ஓர் முறை பிறப்பினும்
உன்போலொரு பெண்ணாய்
பிறந்திடவல்வா
வேண்டும் ....
ஆணாய் பிறந்ததினால்
நான் உன்னைப் பாடுகிறேன்...
பெண்ணாய்
பிறந்திருந்தாள்
பெருமை
பட்டிருப்பேன் ...
இன்னுமோர்
பிறப்பிருந்தாள்
பெற்றுவிட
வேண்டுகிறேன் ...
இறைவா நீ காண
இன்பம் கண்டேன்
எனதருகேயும்
எங்கேயுமான
பெண்மையிடம்
ஓர் ஆண்மகனாய் ...
நேரம்மிருந்தால் பிறந்துவா
எனக்கொரு
பிறப்புடன் ...
பெண்மை பெறுவோம்
தாய்மை பெறுவோம்
பேரின்பம் கொண்டு
முக்தியடைவோம் ...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...