Thursday, March 17, 2011

உன் அழகு எனக்கு அற்பமானது...

புதிதில்
உன் அழகும்
உன்னை நான்
காதலிக்க ஒரு
காரணம்தான் ....
அதனாலன்றோ
நீ காறி உமிழ்ந்த
போதும்
உன்பின்னால்
ஓடோடி வந்தேன் ...
ஆனால்
இன்று
உனது அழகுகள்
பறிக்கப் பட்டு
நீ முகம்காட்ட
நாணி
திறையிட்டு
ஒதுங்கினாலும்
நான் உன்னை
பின்தொடர்ந்தே
வருவேன்
....
நீ திமிராய்
திராவகப்
பார்வை வீசி
திரிந்தபோது
உன்
அழகுக்கு
அழகுசேர்த்ததன்றோ...
நீ திராவகத்தால்
எரிக்கப்பட்டு
தினறிச்
செல்லும் போது ....
திரவியச் சோலையாய்
நான் வளர்த்த காதலை
உதறிவிட்டு
செல்ல என
உள்ளமென்ன
உதிரும் முடிகூட
சம்மதிக்காது
...?
உன் அழகு நான்
உன்மீது
காதல்
தொடங்கத்தான்
காரணம் ....
காதல்
செய்வதற்கல்ல...
நீ ஓடிநாலூம்
வருவேன்
ஓடியே நாளும்
உன்னோடு வாழ ...
ஒதுங்கிவிட
மாட்டேன் ....
நீதான் உணர்வேனா எனகிறாய்....!

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...