புதிதில்
உன் அழகும்
உன்னை நான்
காதலிக்க ஒரு
காரணம்தான் ....
அதனாலன்றோ
நீ காறி உமிழ்ந்த
போதும்
உன்பின்னால்
ஓடோடி வந்தேன் ...
ஆனால்
இன்று
உனது அழகுகள்
பறிக்கப் பட்டு
நீ முகம்காட்ட
நாணி
திறையிட்டு
ஒதுங்கினாலும்
நான் உன்னை
பின்தொடர்ந்தே
வருவேன்
....
நீ திமிராய்
திராவகப்
பார்வை வீசி
திரிந்தபோது
உன்
அழகுக்கு
அழகுசேர்த்ததன்றோ...
நீ திராவகத்தால்
எரிக்கப்பட்டு
தினறிச்
செல்லும் போது ....
திரவியச் சோலையாய்
நான் வளர்த்த காதலை
உதறிவிட்டு
செல்ல என
உள்ளமென்ன
உதிரும் முடிகூட
சம்மதிக்காது
...?
உன் அழகு நான்
உன்மீது
காதல்
தொடங்கத்தான்
காரணம் ....
காதல்
செய்வதற்கல்ல...
நீ ஓடிநாலூம்
வருவேன்
ஓடியே நாளும்
உன்னோடு வாழ ...
ஒதுங்கிவிட
மாட்டேன் ....
நீதான் உணர்வேனா எனகிறாய்....!
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment